இலங்கையின் சிறந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட சிறீதரன் எம்.பி!
இத்தரப்படுத்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒன்பதாம் (09) இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அது மட்டுமல்லாது இலங்கையில் உள்ள தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களில் இரண்டாம் இடத்தையும் (முதல் இடம் தற்போதைய அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தரப்படுத்தலில் முதல் நிலையிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான பதக்கம் மற்றும் விருது என்பன தபால் மூலம் இலங்கை நாடாளுமன்றத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் சிறீரதன் அவர்களுக்கு அனுப்பப்பட்டு (8/7/2020) அவரது அலுவலகமான அறிவகத்தில் கிடைக்கப் பெற்றுள்ளன.
இச்சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் தரப்படுத்தலின் தெரிவுக்கான தகமைகளாக மக்கள் சார் பிரச்சினைகளை நாடாளுமன்றில் வெளிப்படுத்தியமை, ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகளை சரியான முறையில் கையான்டமை, உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவம், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் , நீதி, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு, நாடாளுமன்ற அமர்வுகளுக்கு சமூகமளித்தமை என பல்வேறு பிரிவுகளில் புள்ளிகள் வழங்கப்பட்டே தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இத் தெரிவின் உத்தியோக பூர்வ முடிவுகள் மற்றும் தரவுகள் Manthri.lk எனும் இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இனையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது...
குறித்த தரப்படுத்தல் கடந்த ஆண்டு (2020) பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் Manthiri.lk இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
தற்போதைய ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதல் ஆறு மாத காலப்பகுதியின் Manthiri.lk தரப்படுத்தலிலும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிறீதரன் எம்.பி முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தெளிவுபடுத்தலுக்கான மீள்பதிவு!
இலங்கையின் சிறந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட சிறீதரன் எம்.பி!
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 15, 2021
Rating:

கருத்துகள் இல்லை: