காத்தான்குடி ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கலாபீட நிஜ வரலாற்று உதயம்....
இத்தொடர் யாருடைய மனதையும் புன்படுத்துவதாகவோ/ சிரமத்தை கொடுப்பதற்காகவோ அல்ல,மாறாக பொதுமக்கள் இதன் உண்மையான நிலைப்பாட்டினை ஆழமாக அறிந்து இக்கலாபீடம் தொடர்பில் ஒரு நியாயமான தீர்வொன்றின்பால் செல்ல வேண்டும் என்பதற்காகவும் , இக்கலாபீட முரண்பாடுகளை நாட்டின் சூழ்நிலை கருதி வெளித்தீர்ப்புக்கு சென்று விடாமல் நாம் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு பொறிமுறையினுடாக தீர்த்துக் கொள்ளும் நோக்கில் பல முயற்சிகள் எமது ஊர்தலைமைத்துவம் ஊடாக எடுத்துக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில், இக்கலாபீடத்திற்கு எதிராக இயங்கும் மாற்றுக்குழு அநாகரிகமான வழிமுறைகளை கையாண்டதன் காரணமமாகவும் அதனால் பல பாதிப்புக்கள் ஏற்பட்டதாலும் குறிப்பாக, இரண்டு நாட்களுக்கு முன் "Natheer Asha'Ari" என்ற முகநூலில் பிரசுரிக்கப்பட்ட விடயம் தொடர்பாகவும் அதனை பார்த்த ,பார்க்காத அனைவருக்கும் ஒரு தெளிவைக்கொடுக்கும் நோக்கத்தில் இது வரையப்படுகிறது.
இதுதொடர்பான பின்னூட்டங்கள் தூய்மையானதாக, நீதியானதாக அமைகின்றபோது கலாபீடத்தின் பிரார்த்தனைகள் நிச்சயமாக கிடைக்கும் என்பதுடன், நீதியற்று அகெளரவமாக அமைகின்றபோது அவைகள் தீர்ப்புக்காக நீதியாளன் வல்ல அழ்ழாஹ்விடம் பாரம் சாட்டப்படும் என்பதை மிகப்பணிவுடன் கூறியவர்களாய்,
ஆரம்பமாக,
ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கலாபீடம், அதன் நிர்வாகம் யாருக்கும் பொறுப்புக்கொடுக்கவுமில்லை பொறுப்புக்கொடுக்க எவ்வித அவசியமும் எமக்கு ஏற்படவுமில்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்தப்படுவதுடன்,
பின்வரும் தலைப்புக்களில் இத்தொடர், மக்களின் சிந்தனைக்காக சமர்ப்பிக்கப்படுகின்றன.
1) வரலாற்று அறிமுகம்.
A) முதன்முதலில் இதனை உருவாக்கியவர்.
B)ஜா.ஜமாலிய்யா அமைந்திருக்கும் இடம் (காணி)
C)அஷ்ஷெய்க் ஹாமிது லெப்பை ஆலிம் அவர்களுக்கு எப்போது பரிபாலனப் பொறுப்புக் கிடைத்தது.
2)முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தினணக்களத்தில் பதிவு செய்யப்பட்டு பதிவிலக்கம் கொண்ட " மக்காம் பள்ளிவாயல்"
3) அல் மர்ஹும் அல்உஸ்தாத் அஷ்ஷெய்க் முஹம்மது மீரான் முபீன் ஆலிம் கபூரி அவர்களுக்கு எப்போது பரிபாலனப் பொறுப்பு கிடைத்தது.
A)19 பேர் கொண்ட நம்பிக்கை சாசனம் மற்றும் அவர்களின் கலாபீடத்துடனான பங்களிப்புக்கள்,செயற்பாடுகள்.
4) அல் மர்ஹும் அல்உஸ்தாத் அஷ்ஷெய்க் முஹம்மது மீரான் முபீன் ஆலிம் கபூரி அவர்களின் ஜாமிஆ பற்றிய கனவுகள்.
5) ஆரம்ப பரிபாலன உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்கவர்களின் வரலாற்றுத் தியாகங்கள் .
6)ஜாமிஆவின் வளர்ச்சிப் பாதையில், வரலாற்றில் நிரந்தர இடத்தைப் பிடிக்கும் கண்ணியமிக்க உஸ்தாதுமார்களின் உயிர்த்தியாகம் மற்றும் ஏனைய கடின தியாகங்கள்.
7) அல் மர்ஹும் அல்உஸ்தாத் அஷ்ஷெய்க் முஹம்மது மீரான் முபீன் ஆலிம் கபூரி அவர்களிடமிருந்து மெளலவி SHM றமீஸ் ஹாபிழ் ஜமாலி அவர்களின் தலைமையில் உள்ளிட்ட மற்றும் பட்டம் பெற்று வெளியாகிய ஏனைய ஜமாலிகள் சபைக்கு எப்போது பரிபாலனப் பொறுப்பு கிடைத்தது.
8) மெளலவி SHM றமீஸ் ஹாபிழ் ஜமாலி தலைமையில் ஏனைய ஜமாலிகள் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட நிருவாக சபை பரிபாலனம்.
A) ஆரம்ப நிலை
B) நிருவாக சபை விரிவாக்கம்
C) ஜாமிஆவின் அடைவுகள்
D) தற்போது கலாபீடத்தின் கலைத்திட்ட கல்விச் சேவைகள்
E) தூரநோக்கு மற்றும் பணிக்கூற்று அடிப்படையில் மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய ஜமாலிய்யாவின் பயணம்.
9) அழ்ழாஹ்வின் பேருதவியால் ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கலாபீடத்தின் உயர்ச்சி, அதன் காத்திரமான வளர்ச்சிப் பாதையில் முதுகெலும்பாகத்திகழும் தனவந்தப்பரோபகாரிகள் மற்றும் காத்தான்குடி வாழ் மக்களின் மகத்தான பங்களிப்புக்கள் ,உதவிகள்.
10) இறுதியாக, பொதுமக்களின் பிரதான பங்களிப்பில் உருவாக்கப்பட்ட , வளர்க்கப்பட்ட ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கலாபீடம் பொது நிறுவனமா/ தனியார் நிறுவனமா?.
இன்ஷாஅழ்ழா ஒவ்வொரு தலைப்பாக தொடரும் .......
அனைத்திற்கும் வல்ல அழ்ழாஹ்வே நீதியாளனும் தீர்ப்பாளனும்.
நமது தூய்மையான பணிகளை அழ்ழாஹ் நிரப்பமாக கபூல் செய்வானாக
Board of Directors
Jamiathul Jamaliyya Arabic College..
காத்தான்குடி ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கலாபீட நிஜ வரலாற்று உதயம்....
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 17, 2021
Rating:

கருத்துகள் இல்லை: