காலமான ஈழத்தின் மூத்தஎழுத்தாளர் நந்தினிசேவியர் அன்னாருக்கானஅஞ்சலிக் கூட்டம்
16.09.2021 அன்று காலைதிருகோணமலையில் காலமான ஈழத்தின் மூத்தஎழுத்தாளர் நந்தினிசேவியர் அன்னாருக்கானஅஞ்சலிக் கூட்டம் 20.09.2021 இலங்கை நேரம் காலை 11.00 மணிக்கு ZOOM வழியாக பேராசிரியர்சி.
மௌனகுரு தலைமையில் நடைபெற்றது.
பேராசிரியர் சி.மௌனகுரு தனது தலைமை உரையை முகநூலில் நண்பர் நற்குண தயாளன் எழுதி குறிப்புடன் ஆரம்பித்தார்.
மேலும் தனது தலைமை உரையில் எங்கள் மத்தியில் அதிகம் கவனிப்பார்யின்றி, அதிகம் பிரபலம் இல்லாமல் வாழ்ந்து, இலக்கியத்திற்காக இலக்கியமாய் வாழ்ந்து ,இலக்கியத்திற்காய் போராடி, இலக்கியக் காரார்களை அறிமுகப்படுத்தி கடைசி மூச்சு வரை எழுதிக் கொண்டிருந்தவர் தோழர் நந்தினி சேவியர். அவரைப்போல் அதுவாக வாழ்ந்த வாழ்ந்தவர்கள ஒரு சிலரே. அந்த ஒரு சிலரில் தோழர் சேவியரும் ஒருவர். எனக்கூறி சேவியருடான அவரது தொடர்பும் அவரின் கனதியையும் தன் தலைமை உரையில் முன் வைத்தார் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள்.
அடுத்துப் பேசிய வன்னியகுலம் அவர்கள், சேவியரின் சொந்த வாழ்க்கையைப் பற்றி பலருக்கு தெரியாத செய்திகளை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். எனச் சொல்லி அவர் இருந்த இந்த நிலையில் கண்டு நான் கண் கலங்கினேன் என்றதோடு, அவர் காலமாகுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக அவருடன் கதைத்தேன் எனக்கு சிறந்த நண்பராக இருந்தார் என்றார்.
பேராசிரிசியர் யோகராசா அவர்கள், சேவியர் . எனது அயல் கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயது முதல் அவருடன் எனக்கு தொடர்பு இருந்தது நான் மட்டக்களப்புக்கு வந்த பின்னும் அவரிடம் பல விடயங்கள் பேசி இருக்கிறேன். அவருடன் இயங்கி இருக்கிறேன், விமர்சன பூர்வமான கருத்துக்களையும் அறிய தகவல்களையும் என்னிடம் சொல்லுவார். என்றார்.
திருக்கோவில் கவியுவன்,எனக்கு சேவியருடன் நீண்ட காலமாக தொடர்பு இருந்தது. எனக்கும் அவருக்கும் பல கருத்துக்களில் ஒத்து போய் இருக்கிறது. அவரை நான் இலக்கிய வெளியில் ஜேம்ஸ்பாண்ட் என்பேன். அவரது இழப்பு எனக்கு எனக்கு மிகவும் சோர்வை தந்திருக்கிறது. எனக்கூறி சேவியரை பற்றிய முகநூலில் நண்பர் நற்குண தயாளன் எழுதி குறிப்பை யிட்டு தன் மனக்குறையை பதிவு செய்தார்.
ஆ,திருத்துவராஜா அவர்கள் பேசும் பொழுது எனக்கும் சேவியருக்கும் இறமை காலம் தொடர்பு இருந்தது. சேவியரின் கதைகளின் சம்பவங்களுடன் எனக்கும் தொடர்பு இருந்தது என்றார்.
சேவியர் நீண்ட கால நண்பர்க.கோபாலப்பிள்ளை தனது எழுத்துலக வளர்ச்சியில் பெரும் பங்கு இருந்தது என்றதோடு, என்னுடைய வளரச்சிக்கு அவருடைய தொடர்பு பெரும் உதவியாக இருந்தது எனக்கூறி . சேவியருக்கும் அவருக்குமான தொடர்ப்பினை விபரித்தார்,
அவருடன் கடைசிவரை தொடர்பில் இருந்த கலாநி க.குணேஸ்வரன் சேவியரின் தவறிபோன படைப்புகளை நாங்கள் தேடும் பணியில் ஈடுபட்டு கொண்டிருப்பதாக கூறினார்.
கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் , சேவியர் அவர்களை சந்தித்து உரையாடி இருக்கிறேன் அவரது கதைகளின் அழகியலை பற்றி அறிந்து இருக்கிறேன் என்றார்.
சுவிஸ் இருந்து இணைந்த பொய்கை ஜெயாஅவர்கள் சேவியரை பற்றி பலர் அறியாத பல தகவல்களை முன் வைத்து சேவியருக்கு அஞ்சலி செலுத்தினார். .
இவ்வாறாக நந்தினி அவர்களுடன் தொடர்பை பலர் விபரித்தார்கள், பேராசிரியர் கருணாநிதி அவர்கள், இயக்க ரீதியான சிந்தனையுடன் தொடர்பு கொண்டிருந்த ஏ.ஜே.யோகராஜா அவரோடு ஒரே அலுவலகத்தில் வேலை செய்த பத்மராணி, இலக்கிய ரீதியாக அவரை அறிந்து அவருடன் தொடர்பில் இருந்த ஏ.பீர் முஹம்மது, மாவன்னலை மன்சூர், யோகராஜன் சுசிலா,, ரஷிட் எம்.இம்தியாஸ், வேல்நந்தன் ஆகியோர் சேலியருக்கான அஞ்சலிக் குறிப்பை முன் வைத்தார்கள்.
நந்திணி சேவியரின் குடும்பத்திரான திருமதி நந்தினி சேவியர், நந்தினி சேவியரின் மகள், மற்றும் மருமகள், மருமகன் ஆகியோர் உணரச்சிகரமான முறையில் நன்றிதலை தெரிவித்தார்கள்.
சேவிருடான தனது தொடர்பை எடுத்துக் கூறி அக்கூட்டத்தினை ஏற்பாடு செய்த மேமன்கவி நிகழ்வினை தொகுத்தாளித்தார்.
காலமான ஈழத்தின் மூத்தஎழுத்தாளர் நந்தினிசேவியர் அன்னாருக்கானஅஞ்சலிக் கூட்டம்
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 21, 2021
Rating:

கருத்துகள் இல்லை: