Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

விவாதப் போட்டியில் மண்முனைப் பற்று பிரதேச சபை காலிறுதிப் போட்டிக்கு தெரிவு

ஊடகவியலாளர்
ஏ.எல்.டீன்பைரூஸ்

இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்று வரும் விவாதப் போட்டயில் மண்முனைப் பற்று பிரதேச சபை காலிறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனது.

இலங்கையில் காணப்படும் தமிழ் பேசும் உள்ளுராட்சி மன்றங்களை ஒன்றிணைத்து ஒவ்வொரு சபைகளுக்கும் ஒரு தலைப்பு என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ் பேசும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் ஆளுமை மற்றும் அறிவுத்திறனை விருத்தி செய்வதற்காக வேண்டியே மேற்படி போட்டிகள் யாவும் நடைபெற்று வருகின்றது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மேற்படி விவாதப் போட்டியானது இரண்டு சுற்றுக்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இரண்டு சுற்றுகளிலும் மண்முனைப் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் தங்களது விவாத, அறிவுத்திறனை வெளிக்காட்டி வெற்றி பெற்றுள்ளனர்.
நடை பெற்று வரும் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பில் மண்முனைப்பற்று பிரதேச சபை மற்றும் மண்முனை மேற்கு பிரதேச சபை ஆகிய இரண்டும் உள்ளூராட்சி மன்றங்களும் காலிறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
மண்முனைப் பற்று பிரதேச சபையின் விவாதக் குழுவின் தலைவர் M.I.M நசீம் அவர்களும் ஏனைய உறுப்பினர்களான கௌரவ A.B.M.றசீம், கௌரவ திரு நகுலேஸ்வரன், கௌரவ திரு. தினேஷ்குமார் மற்றும் இதனை ஏற்பாடு செய்து வழி நடாத்துகின்ற மண்முனைப்பற்று பிரதேச சபை தவிசாளர் திரு T. தயானந்தன், சபையின் செயலாளர் திரு சர்வேஸ்வரன் ஆகியோருக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றளர்.
covid 19 காரணமாக போட்டிகள் யாவும் zoom பொதி தொழிநுட்ப இணைப்பினுடாக இடம் பெற்று வருகின்றன என்பதும் குறிப்படத்தக்கது.
விவாதப் போட்டியில் மண்முனைப் பற்று பிரதேச சபை காலிறுதிப் போட்டிக்கு தெரிவு Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 18, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.