Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வாழும்போதே வாழ்த்துவோம்-2021

காத்தான்குடி அறிவிப்பாளர் போரத்தின் செயற்திட்டங்களில் ஒன்றான "வாழும் போதே வாழ்த்துவோம்" செயற்திட்டத்தின் கீழ்  சிறு வயதிலேயே கதை ,கவிதை, எழுதுவதில் ஆர்வம் கொண்ட  காத்தான்குடி அல் ஹிறா வித்தியாலயத்தின் மாணவன் முஹம்மட் அனீஸ் முஹம்மத் அம்ஹர் தனது சிறந்த கற்பனைத் திறன் கொண்டு #storyParadise எனும் முகநூல் பக்கத்தில் "இரட்டை பூக்களுக்குள்" என்ற தொடர் கதை மூலம் தனக்கென நேயர்களை உருவாக்கி எழுத்துத் துறையில் சாதனை புரிந்து வருகிறார்.
மாணவன்  முஹம்மட் அனீஸ் முஹம்மத் அம்ஹர் அவர்களை வாழ்த்தும் நிகழ்வு 11.10.2021 திங்கட்கிழமை அவரது இல்லத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி அறிவிப்பாளர் போரத்தின் தலைவர் அறிவிப்பாளர் எம்.பஹ்த் ஜுனைட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  கலாபூஷணம் காத்தான்குடி பெளஸ் மெளலவி அதிதியாக கலந்துகொண்டு  சிறப்பித்ததுடன்

போரத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள்  மற்றும் மாணவன் அம்ஹர் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டு மாணவனை வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.


வாழும்போதே வாழ்த்துவோம்-2021 Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 14, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.