Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி கோட்ட பாடசாலை அதிபர்களுக்கு க. பொது.தராதர. சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் வழங்கிவைப்பு..

(எம்.பஹ்த் ஜுனைட்)

காத்தான்குடி பிரதேச கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் கல்வி ஆர்வலர்களின் நிதிப் பங்களிப்புடன் 2021 ஆம் வருடம் க.பொது.தராதர .சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை பரீட்சைக்கு ஆயத்தப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட வினாதாள்களை பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கும் நிகழ்வு


காத்தான்குடி பிரதேச கல்வி அதிகாரி எம்.எம்.கலாவுதீன் தலைமையில் காத்தான்குடி பிரதேச கல்வி அலுவலகத்தில் இடம் பெற்றது.


இந் நிகழ்வில் பிரதம வளவாளராக
மட்டக்களப்பு மத்தி வலைய கல்வி அலுவலகத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) எம்.ஆர்.எம்.ரமீஸ் அவர்கள் கலந்துகொண்டு அதிபர்களுக்கான அறிவுரைகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கியதுடன், வினாத்தாள்களும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்காக நிதிப் பங்களிப்பு வழங்கிய பாக்கிர் ஆசிரியர், சமூக ஆர்வலர் ஜுனைட் முகம்மது முஜீப், பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




காத்தான்குடி கோட்ட பாடசாலை அதிபர்களுக்கு க. பொது.தராதர. சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்கள் வழங்கிவைப்பு.. Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 27, 2021 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.