30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு பிணை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜூவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகள் பேரறிவாளன் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
தற்போது தற்காலிக விடுப்பில் இருக்கும் பேரறிவாளனுக்கு இந்திய உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி அவருக்கு சிறை விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த விடுமுறை 10 தடவைகள் நீடிக்கப்பட்டிருந்தன.
அத்துடன், தற்காலிக விடுப்பில் இருந்தாலும் தனக்கு வெளியே செல்ல முடியாத காரணத்தினால் பிணை வழங்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
பேரறிவாளனின், உடல் நிலை மற்றும் கல்வித் தகுதியை கருத்திற்கொண்டு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு பிணை – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 10, 2022
Rating:
கருத்துகள் இல்லை: