Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இதோ மகிழ்ச்சியான செய்தி – ஏப்ரல் 02 முதல் 4 மணிநேரமே மின்வெட்டு!



”ஏப்ரல் 02 ஆம் திகதிக்கு பிறகு மின்வெட்டு அமுலாகும் நேரத்தைக் குறைக்ககூடியதாக இருக்கும்.” – என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எதிர்வரும் 2ஆம் திகதி எமக்கு ஒருதொகை டீசல் வருகின்றது. அந்த டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. 

எனவே , 2ஆம் திகதிக்கு பிறகு தற்போதைய நிலைமை ஓரளவுக்கு சீராகும். மின்வெட்டை 4 மணிநேரம்வரை குறைக்கக்கூடியதாக இருக்கும். எரிபொருள் மற்றும் மழைவீழ்ச்சி கிடைத்தால் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க முடியும்.” – என்றார்.

இதோ மகிழ்ச்சியான செய்தி – ஏப்ரல் 02 முதல் 4 மணிநேரமே மின்வெட்டு! Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 01, 2022 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.