Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றி பொதுத்தேர்தலுக்கு செல்லலாம்.


இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறை வேற்றி பொதுத் தேர்தலுக்கு செல்லலாம்.

நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலம் இன்னமும் ஆளுங்கட்சி வசம்தான் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார் சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன. அவ்வாறு இல்லையென எதிரணி நிரூபிக்குமானால், அடுத்தக்கட்ட நகர்வுகளை மேற்கொள்வதற்கு அரசு தயார் எனவும் அவர் அறிவிப்பு விடுத்தார்

இது தொடர்பில் அவர் இரு யோசனைகளையும் முன்வைத்தார்.

1.நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றி பொதுத்தேர்தலுக்கு செல்லலாம்.

( அரசமைப்பின் பிரகாரம், முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெற்று, இரண்டரை வருடங்களுக்கு பிறகே அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. எனினும், நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டால் முன்கூட்டியே கலைக்கலாம். அந்த யோசனைதான் இது.)

2.எதிரணிக்குதான் போதுமானளவு பெரும்பான்மை உள்ளதெனில், ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை ஜனாதிபதியிடம் கோரலாம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என கோரி போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன. அந்த கோரிக்கையை ஏற்பதற்கு அரசு தயார் இல்லை. மாறாக கூட்டரசை அமைக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை பிரதான எதிர்க்கட்சி உட்பட நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் நிராகரித்துள்ளன.

நாடாளுமன்றத்தில் அரசுக்கான ஆதரவை 42 உறுப்பினர்கள் விலக்கிக்கொண்டுள்ளனர். சுயாதீனமாக செயற்படபோவதாக அறிவித்துள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து எதிரணிகளும், அரசில் இருந்து வெளியேறியவர்களும் ஒன்றிணைந்தால் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை காட்ட முடியும். ஆனால் இந்த தேர்வுக்கு எதிரணிகள் தயார் இல்லை. இதனால் அரசமைப்பு மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன,

நாடாளுமன்றத்தில் அரசுக்கான ஆதரவை 42 உறுப்பினர்கள் விலக்கிக்கொண்டுள்ளனர். சுயாதீனமாக செயற்படபோவதாக அறிவித்துள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து எதிரணிகளும், அரசில் இருந்து வெளியேறியவர்களும் ஒன்றிணைந்தால் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை காட்ட முடியும். ஆனால் இந்த தேர்வுக்கு எதிரணிகள் தயார் இல்லை. இதனால் அரசமைப்பு மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் நாடாளுமன்றத்தில்  உரையாற்றிய சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன,

“ நிறைவேற்று அதிகாரம் மற்றும் நாடாளுமன்ற அதிகாரத்தை மக்கள் நிராகரிக்கின்றனர். இதனை நாம் ஏற்கவேண்டும். அதனால்தான் அமைச்சர்கள் பதவி துறக்கின்றனர். ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்துகின்றனர். 

எனவே, சர்வக்கட்சி அரசு என்ற பொறிமுறையை மக்கள் நம்பமாட்டார்கள். அதனை நிராகரித்துள்ளனர். தற்போது மக்களின் நம்பிக்கைதான் முக்கியம். இந்த ஆட்சி இல்லாவிட்டால், மற்றைய தரப்புக்கு ஆட்சி கையளிக்கப்பட வேண்டும். ஆக – இந்த பிரச்சினைக்கு அரசமைப்பு ரீதியில் தற்போது தீர்வு இல்லை. 

எனவே, அரசமைப்புக்கு வெளியில் சென்று தீர்வை தேட வேண்டும் . அதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். அவ்வாறு கண்டறியும் தீர்வை அரசமைப்புக்குள் உள்வாங்கலாம். அதற்கான யோசனையை முன்வைக்கலாம். அதற்கு மக்கள் ஆணையே சிறந்த வழி. எனவே, மக்களின் விருப்பத்துக்கேற்பவே அரசு அமைக்கப்பட வேண்டும்.” – என்றார்.

ஆர்.சனத்

நாடாளுமன்றத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றி பொதுத்தேர்தலுக்கு செல்லலாம். Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 06, 2022 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.