அனைத்து சம்மேளனங்களினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான "கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் கூட்டமைப்பு உதயம்
நீண்ட காலங்களாக கிழக்கு மாகாணங்களில் சிவில் சமூக நிறுவனங்களாக கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கும் அனைத்து சம்மேளனங்களினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான "கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் கூட்டமைப்பின்" அங்குரார்ப்பண நிகழ்வும், "சமகால அரசியல் நகர்வுகளில் முஸ்லிம்கள்" எனும் தலைப்பிலான கலந்துரையாடல் அமர்வும் 2022.12.24 காத்தான்குடி சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ். AMM. றஊப் JP தலைமையில் சம்மேளன அஷ்ஷஹீத் ஏ.அஹமது லெப்பை ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் காலை 10:00 மணி தொடக்கம் பகல் 02:00 மணி வரை மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சம்மேளனங்களின் நீண்ட கால பயணங்களின் திருப்புமுனையாகவும், வரலாற்றில் ஒரு மைற்கல்லாகவும், சம்மேளனங்களின் பரிணாம வளர்ச்சியின் அத்தியாயமாகவும் அமையப்பெற்ற இந் நிகழ்வில் பல ஆக்கபூர்வமான ஆலோசனைகளும், காலம் வேண்டி நிற்கும் சமகால பிரச்சினைகளும், அவற்றிற்கான பொறிமுறையுடன் கூடிய தீர்வுகளும், இவற்றினை சீர்செய்வதற்கும் மேலதிக நடவடிக்கைகளினை மேற்கொள்வதற்குமான திட்ட வரைபுகள் தொடர்பாகவும் விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டன.
மேற்படி, உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவராக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ். AMM. றஊப் JP அவர்கள் ஏகமனதாக சபையோரினால் தெரிவு செய்யப்பட்டார்.
நீண்ட கால இலக்குகளுடன் பயணிக்கவுள்ள, இப் பயணத்தில் கிழக்கு மாகாணத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வுப் பொதி, அரசியல் அபிலாஷைகள் தொடர்பாகவும் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், உரிய தரப்பபினர்களின் கவனத்திற்கு மிக விரைவில் கொண்டு செல்லவுள்ளதாகவும் தீர்மானம் எட்டப்பட்டது.
அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்ற மேற்படி அமர்வில் அதனது தலைவர், செயலாளர், பொருளாளர், அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் பிரதிநிதிகள், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள், கல்குடா ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள், அக்கறைப்பற்று பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் பிரதிநிதிகள், சம்மாந்துறை பள்ளிவாயல்கள் சம்மேளனம் பிரதிநிதிகள், மருதமுனை பள்ளிவாயல்கள் சம்மேளனம் பிரதிநிதிகள்,
ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயல் பிரதிநிதிகள், தோப்பூர் அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளனம் பிரதிநிதிகள், ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் சம்மேளனம் பிரதிநிதிகள், கிண்ணியா மஜ்லிஸ் ஷுரா பிரதிநிதிகள், மூதூர் மஜ்லிஸ் ஷுரா பிரதிநிதிகள், கிண்ணியா பள்ளிவாயல்கள் சம்மேளனம்பிரதிநிதிகள், மருதமுனை மஸ்ஜித் நூர் ஜும்ஆ பள்ளிவாயல் பிரதிநிதிகள், ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் பிரதிநிதிகள் மற்றும் மீராவோடை ஜும்ஆப் பள்ளிவாயல் பிரதிநிதிகள், ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அனைத்து சம்மேளனங்களினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான "கிழக்கு மாகாண பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் கூட்டமைப்பு உதயம்
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 25, 2022
Rating:

கருத்துகள் இல்லை: