போதைப் பொருளுடன் சிவனடி பாத மலைக்கு யாத்திரை வந்த 25 இளைஞர்கள் கைது.
பாடசாலை விடுமுறை மற்றும் அரசாங்க விடுமுறை காரணமாக அதிகளவில் யாத்திரிகர்கள் வருகை அதில் போதைப் பொருளுடன் சிவனடி பாத மலைக்கு யாத்திரை வந்த 25 இளைஞர்கள் கைது.
தொடர் விடுமுறை காரணமாக கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாட்டின் பல்வேறு போதை பொருட்களுடன் சிவனடி பாத மலைக்கு யாத்திரை வந்த 25 இளைஞர்கள் ஹட்டன் விசேட போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விஜிதாத அல்விஸ் அவர்களின் பணிப்புரையின் பேரில், ஹட்டன் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்களும், ஹட்டன் பிரிவுக்குட்பட்ட ஏனைய பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளும் இணைந்து பொலிஸ் உத்தியோகபூர்வ ஸ்டௌட் மோப்ப நாய் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு களில் இந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஹட்டன் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவர், சிவனடி பாத யாத்திரை வரும் வாகனங்கள் யாத்திரியர்களை சோதனையிட்ட போது கஞ்சா மது போன்ற பல்வேறு போதை பொருட்களுடன் யாத்திரை வந்த 25 இளைஞர்கள் கடந்த இரண்டு திரைப்படங்களில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
ஹட்டன் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் வீதி தடை ஏற்படுத்தி சோதனை இட்ட போது கைது செய்யப்பட்ட இவர்கள், காலி, சிலாபம் , மொனராகலை போன்ற பல்வேறு பிரதேசங்களில் இருந்து சிவனடி பாத யாத்திரை வந்த 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட வர்கள் எனவும், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து வீதி தடை ஏற்படுத்தி சோதனை மேற்கொண்டு போதைப்பொருள் எடுத்து வரும் நபர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போதைப் பொருளுடன் சிவனடி பாத மலைக்கு யாத்திரை வந்த 25 இளைஞர்கள் கைது.
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 26, 2022
Rating:

கருத்துகள் இல்லை: