தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை இம்மாதம் வெளியிட ஏற்பாடு
அண்மையில் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடையும். இம்முறை 334,698 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளை இம்மாதம் வெளியிட ஏற்பாடு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 12, 2023
Rating:
.jpg)
கருத்துகள் இல்லை: