Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவராக கௌசல்ய நவரத்ன தெரிவு

 


இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான தலைவராக சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன  தெரிவு செய்யப்பட்டார். 

 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

 

சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன தலைவர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்ததோடு, செயலாளர் பதவிக்காக சட்டத்தரணி இசுரு பலபட்டபெந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

குறித்த பதவிகளுக்காக வேறு எவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை. அதற்கமைய, சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன சங்கத்தின் தலைவராகவும் சட்டத்தரணி இசுரு பாலபட்டபெந்தி செயலாளராகவும் தெரிவாகியுள்ளனர்.

 

வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கைகள் சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி இந்திகா தேவ்முனி தலைமையில் இடம்பெற்றன..

T.Yuwaraj

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவராக கௌசல்ய நவரத்ன தெரிவு Reviewed by www.lankanvoice.lk on ஜனவரி 12, 2023 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.