ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா எழுதிய"உமர் ரலி புராணம்" நூல் சென்னையில் வெளியீடு
ஈழம் தந்த தீந்தமிழ்ப் புலவரும், முத்தமிழ் அறிஞரும், சூஃபி ஞானியுமாகிய அல் ஆரிஃபு பில்லாஹ் இமாம் ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் அல் ஹாஷிமிய் மௌலானா (ஜே.எஸ்.கே,ஏ,ஏ,எச். மௌலானா) எழுதிய "உமர் ரலி புராணம்" எனும் நூலின் வெளியீட்டு விழா இன்று (5) வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை, எழும்பூர், இலக்கம் 2ஏ, பொன்னியம்மன் கோயில் வீதியில் உள்ள ரமதா ஹோட்டலில் இடம்பெறும்.
நபிகள் நாயகத்தின் அருமைத் தோழரும் இஸ்லாமிய பேரரசின் இரண்டாவது கலீஃபாவுமாகிய உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மூன்று காண்டங்களாக வகுத்து அதன் முதலாவது உதய காண்டம் தற்போது வெளிவந்துள்ளது. 21 படலங்களையும் 682 செய்யுள்களையும் அதற்கான கொண்டுக்கூட்டு, பொருள், குறிப்பு என முழுமையான விளக்கத்தை உள்ளடக்கியதாக இவ் அரும்பெரும் காவியம் வெளியிடப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வை www.youtube.com/www emsmedia.net என்ற யூடியூப் தளம் மற்றும் இணையத்தளம் மூலம் உலக வாழ் அன்பர்கள் அனைவரும் நேரடியாகப் பார்வை இடலாம்..
ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா எழுதிய"உமர் ரலி புராணம்" நூல் சென்னையில் வெளியீடு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 05, 2023
Rating:

கருத்துகள் இல்லை: