Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடு மட்டக்களப்பில். மட்டுநகர் வருகின்றார் சஜித் பிரேமதாச.

(ஏ.எல்.டீன் பைரூஸ்)

ஐக்கிய மக்கள் சக்தியின் கிழக்கு மாகான அமைப்பாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்களின் ஏற்பாட்டினில் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடு மட்டக்களப்பில் எதிர்வரும். 20.04.2024 சனிக்கிழமை  பி.ப.2.30.மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்கா சதுக்கத்தில் மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகளுடன் நடைபெற இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம அமைப்பாளர் அல்ஹாஜ் MM.முஸ்தபா லங்கன் வொய்ஸ் ஊடகத்திற்கு  தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள இம்மாநாடு தொடர்பான பணிகளை மேற்கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் எஸ். கணேசமூர்த்தி, முகாமையாளர் சிறி உட்பட தொகுதி அமைப்பாளர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் களத்தில் பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இம்மாநாட்டில் கலந்து  கொள்ளவென கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச., ஹிருணிக்கா பிரேமசந்திர, நளின் பண்டார, இம்றான் மஹ்றூப் உட்பட கட்சியின்  முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளதாகவும் இதன் போது தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாடு மட்டக்களப்பில். மட்டுநகர் வருகின்றார் சஜித் பிரேமதாச. Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 18, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.