பாலித எனும் ஒரு மனிதநேயம் மிக்க மனிதனை இந்த நாடு இழந்துள்ளது - அலி சாஹிர் மௌலானா
அரசியலுக்கு அப்பால் பாலித எனும் ஒரு மனிதநேயம் மிக்க மனிதனை இந்த நாடு இழந்துள்ளது- தேசத்திற்கும் இது ஒரு பாரிய இழப்பாகும் = அலி சாஹிர் மௌலானா MP
எனது 30 வருடகால அரசியல் வரலாற்றில் பாலித தேவர பெருமை போன்ற ஒரு பணிவான , உணர்ச்சிமிக்க ,அடி மட்ட மக்கள் பிரதிநிதியை நான் கண்டதில்லை - அவர் ஒரு மனிதாபிமானம் மிகைத்த ஒரு உண்மையான மனிதர் - அவரது வழியில் என்றும் தனித்துவம் மிக்கவர் , மக்களோடு மக்களாக ஒன்றித்து அடி மட்டத்தில் இருந்து பணியாற்றும் மக்கள் சேவகன் ஆவார் ,
எந்நேரமும் எல்லோருடனும் புன்னகை பூத்த முகத்துடன் அன்பாக உரையாடும் தன்மை கொண்டவர் , கடந்த நல்லாட்சி அரசில் சமூக வலுவூட்டல் அமைச்சின் இராஜாங்க அமைச்சராக நானும் அதன் பிரதி அமைச்சராக அவரும் செயட்பட்டோம் - அவர் இன வாதம் , பிரதேச வாதம் எல்லாம் கடந்து மனிதநேயத்தை நேசிக்கும் ஒருவராக என்றும் செயற்பட்டு வந்த ஒருவர் ஆவார் .
இன்று இவரது எதிர்பாராத திடீர் இழப்பு செய்தியை அறிந்து மிக அதிர்ச்சி அடைந்தேன்- முழு நாடும் ஒரு மனிதநேய பண்பாளனை இழந்த செய்தியால் துயரம் அடைந்து நிற்கிறது ,
அவரது இழப்பால் நிலைகுலைந்து நிற்கும் அவரது குடும்ப உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
அலி சாஹிர் மௌலானா- MP
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-
மட்டக்களப்பு மாவட்டம்
பாலித எனும் ஒரு மனிதநேயம் மிக்க மனிதனை இந்த நாடு இழந்துள்ளது - அலி சாஹிர் மௌலானா
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 18, 2024
Rating:

கருத்துகள் இல்லை: