காத்தான்குடி மீரா பாலிகா பாடசாலையின் நஜிமுடீன் ஆசிரியருக்கான பிரியாவிடை நிகழ்வு
காத்தான்குடி மீரா பாலிகா (தேசிய பாடசாலை) சிரேஷ்ட ஆசிரியரான MMY. Najimudeen-MBA,B.sc (Acct),sp.Eng.Trnd. ஆசிரியர் மட்டக்களப்பு மத்தி வலயத்தின் ஆங்கில பாட வளவாளராக (ISA) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மத்தி வலயத்தின் ஆங்கில பாட வளவாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள காத்தான்குடி மீரா காலிகா தேசிய பாடசாலையின் சிரேஸ்ட ஆசிரியரான Mr.. MMY. Najimudeen அவர்களுக்கான நியமனக்கடிதம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்வி பணிப்பாளர் MM.ஜவாத் (நழீமி) SLEAS அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் ஆசிரியராகவும் ஆசிரியர் சங்கத்தின் தலைவராகவும் இவர் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்'தக்கது.
மேலும் இவர் காத்தான்குடி மத்திய கல்லூரியில் ஆங்கில பாட ஆசிரியராகவும் பகுதித்தலைவராகவும் சுமார் 20 வருடங்கள் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் பயிற்றப்பட்ட ஆங்கில அசிரியராகக் காணப்படுவதுடன் கல்விப் புலத்தில் இவர் MBA (B.Sc Acc & Fin) மேலதிக கல்வித் தகைமைகளைத் தன்னகத்தே கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பல்வேறு சேவைகளை வழங்கிய
Mr.MMY.Najimudeen அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக இதன் போது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்
மேற்படி பிரியாவிடை நிகழ்வு பாடசாலையில் இடம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடி மீரா பாலிகா பாடசாலையின் நஜிமுடீன் ஆசிரியருக்கான பிரியாவிடை நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 18, 2024
Rating:

கருத்துகள் இல்லை: