காத்தான்குடி மீரா பாலிகா பாடசாலை மாணவி தேசிய மட்ட ஒலிம்பியாட் பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு சர்வதேச மட்ட போட்டிகளிலும் பங்கேற்கும்
காத்தான்குடி மீரா பாலிகா (தேசிய பாடசாலை) மாணவிதேசிய மட்ட ஒலிம்பியாட் பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளளார்.
மேலும் இவருக்கு சர்வதேச மட்ட போட்டிகளிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் தரம் 11 ஐச் சேர்ந்த MM. Hashma Hanim தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கான பாராட்டு நிகழ்வு ஒன்று பாடசாலை மட்டத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் MHM. றமீஸ் (SLEAS) கலந்து கொண்டு மாணவிக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.
மேற்படி மாணவி தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் M.M.மன்சூர் அவர்களின் புதல்வியாவார்.
மேலும் இம் மாணவிகளைப் பயிற்று வித்த கணிதப் பாட ஆசிரியர்களான MI.ஸிபா ஆசிரியை மற்றும் CT. டினாஹ் ஆசிரியைகளுக்கு பாடசாலை சமூகத்தின் சார்பாக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின் றோம்.
காத்தான்குடி மீரா பாலிகா பாடசாலை மாணவி தேசிய மட்ட ஒலிம்பியாட் பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு சர்வதேச மட்ட போட்டிகளிலும் பங்கேற்கும்
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 30, 2024
Rating:

கருத்துகள் இல்லை: