காத்தான்குடியில் இடம் பெற்ற அரச உத்தியோகஸ்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள பாட நேறியின் இறுதி நிகழ்வு.
காத்தான்குடியில் இடம் பெற்ற அரச உத்தியோகஸ்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள பாட நேறியின் இறுதி நிகழ்வு அனைவரினதும் பங்கு பற்றுதலுடன் சிறப்பாக இடம் பெற்றன.
அரச உத்தியோகஸ் தர்களுக்கான 150 மணித்தியால இரண்டாம் மொழி சிங்களப் பாடநெறியின் இறுதி நிகழ்வு மட்டக்களப்பு மத்தி வலயத்தின் சிங்கள மொழி பாட இணைப்பாளர் ஏ.எல்.எம்.ரிஸ்வி தலைமையில் 28.04.2024 காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
மேற்படி பயிற்சி நேறியில் 87 அரச உத்தியோகாஸ்தர்கள் இரு வகுப்பினர்களாக தமது பாடநெறியினை நிறைவு செய்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வின் கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்
காத்தான்குடி மண்ணின் கல்விமாங்களில் ஒருவருமான Mr.TMM.அன்சார்(நழீமி) அவர்களும் மட்டக்களப்பு மத்திவலயத்தின் உளவளத் துனை வழிகாட்டல்
ஆலோசகருமான Mr.A.M.ஜவாத், ஹிழுறிய வித்தியாலயத்தின் அதிபர் Mr.SI.யாஷீர் அரபாத், இரண்டாம் மொழி பயிற்சி வளவாளர்களான திருமதி. J. Kalpani அவர்களும் Miss.M.Yasotharani உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் சிறப்பம்சமாக பயிற்சியில் பங்கு பற்றிய உத்தியோகஸ்தர்களால் கலை நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு அரங்கேற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
காத்தான்குடியில் இடம் பெற்ற அரச உத்தியோகஸ்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள பாட நேறியின் இறுதி நிகழ்வு.
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 30, 2024
Rating:

கருத்துகள் இல்லை: