Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

உமா ஓயா நீர் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டது....


மகாவலிக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் எமது நாட்டு மக்களுக்கு திறந்து விடப்பட்ட இரண்டாவது பெரிய திட்டமாக உமா ஓயா நீர் திட்டமாகும்.



ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டது.


ஈரானின் ஏற்றுமதி அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் அடிப்படையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் 2011 இல் ஆரம்பிக்கப்பட்டது.


ஊவா மாகாணத்தை மையமாகக் கொண்ட பல்நோக்கு திட்டம் 24 கிலோமீற்றர் நீளம் கொண்டது. புழுல்பொல நீர்த்தேக்கத்தில் இருந்து 4 கிலோமீற்றர் தூரத்திற்கு பாதாள குழாய்கள் மூலம் டயரபா நீர்த்தேக்கத்திற்கு நீர் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் டயரபா நீர்த்தேக்கத்திலிருந்து 15.5 கிலோமீற்றர் நீளமான பாதாள பாதையின் ஊடாக பவர்ஹவுஸ் ஆலைக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது.


நாட்டின் தேசிய மின்சார அமைப்பில் சேர்க்கப்பட வேண்டிய மின்சாரத் திறன் 120 மெகாவாட் ஆகும்.


அத்துடன், அந்தத் திட்டத்தின் ஊடாக பண்டாரவளை, பதுளை, மொனராகலை பிரதேசங்களுக்கு குடிநீர் விநியோகமும், பதுளை, மொனராகலை பிரதேசங்களில் விவசாயத் தேவைகளுக்கான நீரும் வழங்கப்படும்.





உமா ஓயா நீர் திட்டம் மக்களிடம் கையளிக்கப்பட்டது.... Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 24, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.