மே தின தாக சாந்தி காத்தான்குடியில்..
காத்தான்குடி பிளிட்ஸ் இளைஞர் சமூக அமைப்பு (Blitz) மற்றும் ஆட்டோ சங்கத்தின் ஏற்பாட்டில் மே தின தாக சாந்தி நிகழ்வு புதன் கிழமை (01) குட்வின் சதுக்கத்தில் இடம்பெற்றது.
அதிகமான உஷ்னம் நிலவும் இக்காலத்தில் வீதியில் பயணிக்கும் பயணிகள் மற்றும் வாகண ஓட்டுனர்கள் மிகவும் சிரமங்களை முகம் கொடுத்து வரும் நிலையில் அவர்களின் தாகத்தை தீர்க்கும் இம் மாதிரியான மனிதபிமான செயற்பாடுகள் பாராட்டத்தக்கது.
இந்நிகழ்வின் ஊடாக சுமார் மூவாயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(எம்.பஹத் ஜுனைட்)
மே தின தாக சாந்தி காத்தான்குடியில்..
Reviewed by www.lankanvoice.lk
on
மே 02, 2024
Rating:
கருத்துகள் இல்லை: