Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வாகன வருமான வரிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கிடையிலான வாகன வருமானவரிப் பத்திரம் வழங்கும் செயற்பாடு எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள நடைமுறைகளுக்கமைய நாடளாவிய ரீதியில் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களுக்குமான வாகன வருமானவரிப் பத்திரத்தை எந்தவொரு பிரதேச செயலகங்களில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும், இதுவரை காலமும் இணைய வழி மூலம் இலகுரக வாகனங்களுக்கு மாத்திரம் வாகன வருமானவரிப்பத்திரம் வழங்கப்பட்ட நிலையில் இனி வருங்காலங்களில் இணைய வழி மூலம் அனைத்து வாகனங்களுக்கமான வருமானவரிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் வட மாகாண மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் தெரிவித்துள்ளார்.



வாகன வருமான வரிப்பத்திரம் வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 02, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.