Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மொழித் தினவிழா - 2024

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மொழித் தின விழா மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் MM.ஜவாத்  தலைமையில் (01.08.2024 வியாழக்கிழமை) ஏறாவூர் அலிகார்(தேசிய பாடசாலை) ஏறாவூர் அல்-முனீறா பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் ஏறாவூர் அறபா வித்யாலயம் என்பவற்றில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திர குமார் அவர்களும், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலயம், கல்குடா வலயம், மட்டக்களப்பு மேற்கு வலயம் பட்டிருப்பு  கல்வி வலயங்களின் வலயக் கல்விப் பணிப்பாளர்களும், விஷேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்களும் ஏனைய அதிதிகளாக, ஆசிரிய ஆலோசகர்கள், இணைப்பாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி நிகழ்வில் மாணவர்கள் தங்கள் திறமைகளை 
வெளிப்படுத்தியதுடன் 800 க்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் இதன் போது கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மொழித் தினவிழா - 2024 Reviewed by www.lankanvoice.lk on ஆகஸ்ட் 03, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.