காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டினில் பிரதேச மௌலவிய்யாக்களுக்கான கருத்தாடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் பிரதேச மெளலவிய்யாக்களுக்கான கருத்தாடல் நிகழ்வு 15.09.2024 அன்று காலை 8.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை காத்தான்குடி மத்திய கல்லூரி பரீட் மண்டபத்தில் ஜம்இய்யாவின் தலைவர் அஷ் ஷேய்க் AM ஹாரூன் (ரஷாதி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஜம்இய்யாவின் நிருவாக சபை உறுப்பினரும் தஃவா குழு செயலாளருமான அஷ் ஷேய்க் அல் ஹாபிழ் MMM இல்ஹாம் (பலாஹி) BA அவர்களின் கிறாஅத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் தலைமையுரையும் வரவேற்புரையும் ஜம்இய்யாவின் கௌரவத் தலைவர் அஷ்ஷேய்க் AM ஹாரூன் (ரஷாதி) அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்வுக்கு வளவாளர்களாக நாடறிந்த பேச்சாளர்களான பேருவளை, ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய்யாவின் முதல்வர் உஸ்தாத் அஷ் ஷேய்க் AC அகார் முஹம்மத் (நளீமி) மற்றும் வெலிகமை பாரி அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ் ஷேய்க் AR அப்துர் ரஹ்மான் ஹாபிஸ் (மழாஹிரி) ஆகியோர்கள் கலந்து சிறப்பித்ததுடன் விசேட சொற்பொழிவுகள் ஆற்றினர்.
ஜம்இய்யாவின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜம்இய்யாவின் செயலாளர்
அஷ்ஷேய்க்
MI.ஜவாஹிர் (பலாஹி) BA அவர்கள் முன்வைத்தார்கள்.
ஜம்இய்யாவின் தஃவா குழு செயலாளர் அஷ் ஷேய்க் அல் ஹாபிழ் MMM இல்ஹாம் (பலாஹி) BA அவர்கள் நிகழ்வுகளை தொகுத்து வழங்கியதுடன் நன்றியுரையும் நிகழ்த்தினார்கள்.
சுமார் 400 க்கு மேற்பட்ட மௌலவிய்யாக்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்ததுடன் ஜம்இய்யாவின் நிருவாக சபை உறுப்பினர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(ஊடகப் பிரிவு-
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளை)
காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டினில் பிரதேச மௌலவிய்யாக்களுக்கான கருத்தாடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 16, 2024
Rating:

கருத்துகள் இல்லை: