சர்வதேச பேச்சுப் போட்டியில் சம்மாந்துறை மாணவி வெற்றிச் சான்றிதழ்...
ஸ்கொட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவம் நடாத்திய 06-10 வயதினருக்கிடையில் - இந்தியா,மலேசியா,கனடா, இலங்கை, அமெரிக்கா, ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து ,கட்டார், மலேசியா, சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா உட்பட 26 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்ற "கல்வி கண் போன்றது"எனும் தலைப்பில் இடம்பெற்ற உலகலாவிய பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு *சர்வதேச ரீதியில் வெற்றி பெற்று, பாராட்டுச் சான்றிதழினைப் பொற்றுக் கொண்ட இலங்கை தேசத்தின் சார்பில் கலந்து கொண்ட சம்மாந்துறை அல்- அர்சத் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) மாணவியான *ஜலீல் பாத்திமா மின்ஹாவுக்கும்* இவருக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்கள் மற்றும் அவரது பெற்றோருக்கும் பாடசாலை சமூகம் பாடசாலையில் *மிக பிரமாண்டமான முறையில் பாராட்டி கௌரவிக்கும் விழாவினை* ஏற்பாடு செய்திருந்தது.
இம் மாணவி இதற்கு முன்னர் தமிழ்நாட்டு இலக்கிய கழகம் வழங்கிய இந்திய தேசத்தின் ஜனாதிபதி *அப்துல் கலாம் கனவுக் கண்ணி விருது*, தமிழ் நாட்டு அரசின் *இளமாமணி காந்தி விருது* மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கிய *சிறந்த மாணவர் விருது* போன்றவைகளையும் சுவீகரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இளம் இலக்கிய ஆர்வளராய்..... கவிதைகள் படைப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். *மின்மினியின் கீறல்கள்* எனும் கவிதைப் புத்தகத்தினையும் மிக விரைவில் வெளியிடவும் ஏற்பாடுகளினைச் செய்தும் வருகிறார்.
இவர் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட தேசபந்து ஜலீல் ஜீ , எம்.ஆயிஷா தம்பதிகளின் ஏக புதல்வியுமாவார்.
இவர் சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் துறைச் சிறார் கலைக் கழகத்தின்- *பிரதித் தலைவியாகவும்* பிரதேச செயலாளர் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பேச்சுப் போட்டியில் சம்மாந்துறை மாணவி வெற்றிச் சான்றிதழ்...
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 17, 2024
Rating:

கருத்துகள் இல்லை: