Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சாய்ந்தமருது லீட் த வே முன்பள்ளியின் சிறுவர் தினம்


 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருதில் 15 வருடங்களாக  இயங்கி வரும் லீட் த வே முன்பள்ளி பாலர் பாடசாலையில் இந்த வருடத்துக்கான சிறுவர் தின நிகழ்வுகள் "பிள்ளைகளைப் பாதுகாப்போம் சமமாக மதிப்போம்" எனும் தொனிப்பொருளில் முன்பள்ளி பணிப்பாளர் ஆசிரியர் ஐ.எம். உவைஸ் (கார்மேல் பற்றிமா கல்லூரி) தலைமையில் மிக விமரிசையாக கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.


நிகழ்வில் பிரதம அதிதியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்,
சங்கீதக் கதிரை, முயலோட்டம்,
நீர் நிரப்புதல், ஓட்டப்பந்தயம், 
பலூன் உடைத்தல் போன்ற விளையாட்டுக்களும் கலைநிகழ்ச்சிகள்,
மாணவர்களின் தனித்திறமைகள் என்பன பாடசாலையின் அதிபர் திருமதி எம்.பாத்திமா பர்ஸானா மற்றும் ஆசிரியை திருமதி எம்.ஜே.எப்.அஜானி ஆகியோர்களின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்று, இறுதியில் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


சாய்ந்தமருது லீட் த வே முன்பள்ளியின் சிறுவர் தினம் Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 04, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.