கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் ஆகியோர்க்கிடையிலான சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்
(Volker Turk ) மற்றும் அவரது குழுவினர் இன்று (25) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்தனர்.
இலங்கைக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வோல்கர் டர்க், இன்று காலை திருகோணமலையில் சிவில் சமூக மற்றும் மதத் தலைவர்களைச் சந்தித்த பின்னர் ஆளுநர் அலுவலகத்திக்கு விஜயம் செய்தார்.
மீள்குடியேற்றம், காணாமல் போனோர், மனித உரிமைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிலப் பிரச்சினை குறித்து அவர்கள் விரிவாக பேசினர்.
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் எடுத்த முடிவுகள் மற்றும் அதன் ஊழல் எதிர்ப்புக் கொள்கைகள் குறித்து மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தனது திருப்தியை வெளிப்படுத்தினார்.
வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் கௌரவ அருண் ஹோமசந்திரா, இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் திரு. மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் Marc-André Franche மற்றும் குழுவினர், கிழக்கு மாகாணத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் என பலரும் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் ஆகியோர்க்கிடையிலான சந்திப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 25, 2025
Rating:

கருத்துகள் இல்லை: