Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

2025.06.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

01. தேசிய நீர் வளங்கள் கொள்கையைத் திருத்தம் செய்தல்

புதிய அரசின் கொள்கைப் பிரகடனத்தின் மூலம் பாதுகாப்பான நீர்ப் பயன்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக நாட்டிலுள்ள அனைத்து நீர் மூலங்களைப் பாதுகாத்தல், குளத்தொகுதிகளை இயங்குநிலைப்படுத்தல், ஆற்றுப்படுக்கைகளை சரியான வகையில் ஆராய்ந்து வளப்படுத்தல் போன்ற பல்வேறு நடைமுறைகளுக்காக நீர்ப் பயன்பாட்டை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டிய தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனால், நாட்டிலுள்ள அனைத்து நீர் மூலங்களை வளப்படுத்திப் பாதுகாத்து சமகால மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நீர் வளத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான அரச கொள்கையொன்றை அமுல்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். தற்போது வலுவிலுள்ள தேசிய நீர்வளக் கொள்கையை மேலும் திருத்தம் செய்ய வேண்டுமென பல்வேறு தரப்பினர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கமைய, கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, தற்போது வலுவிலுள்ள தேசிய நீர்வளக் கொள்கையை மீண்டும் மீளாய்வு செய்து சமகால அரசின் கொள்கைக்கு ஏற்புடைய வகையில் குறித்த கொள்கையைத் திருத்தம் செய்வதற்குப் பொருத்தமான விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக கீழ்க்காணும் அமைச்சர்களுடன் கூடிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• கௌரவ. கே.டீ. லால் காந்த
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
• கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்
• கௌரவ. அருண கருணாதிலக
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர்
• கௌரவ (பொறியியலாளர்) குமார ஜயகொடி
வலுசக்தி அமைச்சர்
• கௌரவ (மருத்துவர்) தம்மிக பட்டபந்தி
சுற்றாடல் அமைச்சர்

02. நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சால் நடாத்தப்படும் நடமாடும் அரச சேவைகள் வேலைத்திட்டம்

கிராமிய பிரதேசங்களிலும், குறைந்த வசதிகளைக் கொண்ட நகர்ப்புறப்பிரதேசங்களிலும் வசித்து வருகின்ற மக்களுக்கு காணிப் பயன்பாடு, கட்டிடங்களுக்கான அனுமதிகளைப் பெறல், வீட்டு வசதிகளின்மை, உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் நீர் விநியோக சேவைகள் தொடர்பாக மேலெழுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் போது அதிகளவான சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த சேவைகளை மக்களுக்கு மிகவும் இலகுவாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நடமாடும் அரச சேவைகள் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்து அமுல்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் மூலம் குறித்த அமைச்சின் கீழ் இயங்குகின்ற தேசிய சமுதாய நீர் விநியோகத் திணைக்களம், தேசிய பௌதீகத் திட்டமிடல் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகாரசபை, நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அதிகாரசபை, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம், கூட்டாதன முகாமைத்துவ அதிகாரசபை மற்றும் கட்டுமான கைத்தொழில் அதிகாரசபை போன்ற நிறுவனங்களின் விடயதானங்களுக்கு ஏற்புடைய சேவைகள் தொடர்பாக மக்களுக்கு நேரடியாக குறித்த நிறுவனங்களின் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. முன்மொழியப்பட்டுள்ள அரச சேவைகள் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. வீதியோரங்களில் யாசகத்தில் ஈடுபடுத்தல், பண்டங்கள் விற்பனை செய்வித்தல், வீட்டுப் பணிகள் உள்ளிட்ட அபாகரமான தொழில்களில் சிறுவர்களை ஈடுபடுத்துவதற்கு எதிரான சட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்தல்

சிறுவர் உரிமைகள் சமவாயத்திற்கமைய 18 வயதுக்குக் குறைவான அனைவரும் சிறுவர்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. புதிய புள்ளிவிபரங்களுக்கமைவாக, நாட்டிலுள்ள மொத்த சனத்தொகையில் 30% சதவீதமானவர்கள் சிறுவர்களாவர். ஒருசில சிறுவர்கள் பல்வேறு காரணங்களால் ஏதேனுமொரு தொழில் செய்வதற்கு உந்தப்படுவதும், தமது தாய் தந்தையுடன், மனித வியாபாரத்திற்கு இரையாகி 'வீதியோர சிறுவராக' பெற்றோர் அல்லாதவர்களுடன் பொது இடங்களில் யாசகத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும், பல்வேறு பொருட்கள் விற்பனையில் ஈடுபடுத்துவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல், பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கு ஈடுபடுத்தல் மற்றும் 16-18 இற்கும் இடைப்பட்ட பிள்ளைகள் வீட்டுப் பணி உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை 2025.07.01 ஆம் திகதி தொடக்கம் முழுமையாகத் தடைசெய்வதற்கு இயலுமை கிட்டும் வகையில் தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளை அந்தந்த அதிகாரிகள் மூலமாக கடுமையாக அமுல்படுத்துவதற்கும், அதுதொடர்பான விரிவான பரப்புரை வேலைத்திட்டத்தின் மூலம் பொதுமக்களைத் தெளிவுபடுத்துவதற்கும் தமது அமைச்சு திட்டமிட்டுள்ள வேலைத்திட்டம் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சால் சமர்பிக்கப்பட்டுள்ளமையால் குறித்த அமைச்சுக்கு உடன்பாட்டை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

04. இலங்கையின் பொதுக்கல்வியை டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு உள்ளாக்கின்ற கருத்திட்டம்

இலங்கையின் பொதுக்கல்வியில் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு உள்ளாக்குவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 20மில்லியன் அமெரிக்க டொலர் நிதியத்தை வழங்குவதற்கு சீனக்குடியரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. கௌரவ ஜனாதிபதி அவர்கள் இவ்வருடம் ஜனவரி மாதம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இத்திட்டத்தை துரிதப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்காக இருதரப்பிற்குமிடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைவாக குறித்த கருத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட 500 பாடசாலைகள் மற்றும் மாதிரி ஸ்மார்ட் வகுப்பறைகளுக்குத் தேவையான உபகரணங்களை உத்தேசக் கருத்திட்டத்தின் மூலம் வழங்குவதற்கும் குறித்த கருத்திட்டத்தின் கீழான வலையமைப்பு வேலைத்திட்ட நடவடிக்கை முகாமைத்துவப் பிரிவு, வேலைத்திட்ட நடவடிக்கைக் கூடம் மற்றும் மாநாட்டு மண்டப இசுறுபாய வளாகத்தில் தாபிப்பதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியின் மூன்று மாடிக் கட்டிட நிர்மாணம்

கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் தற்போதுள்ள பழைய மூன்று மாடிக்கட்டிடம் மாணவர்களின் பயன்பாட்டிற்கு பொருத்தமற்றதாலும் அதனை உடைத்து நீக்கவேண்டுமெனவும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டிட நிபுணர்கள் வழங்கியுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த கட்டிடத்திற்குப் பதிலாக புதிய மூன்று மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. மின்னேரியா, கிரித்தலே, கல்லோயா, ஹுருலு வாவி மற்றும் இராஜாங்கன நீர்ப்பாசனத் திட்டங்களை மறுசீரமைக்கின்ற கருத்திட்டம்

கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உலர் வலயத்தின் பிரதான நீர்ப்பாசனத் திட்டங்கள் சிலவற்றுக்கு பலத்த மோசமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளமையால், குறித்த உத்தேசத் திட்டங்களிலுள்ள விளைச்சல் காணிகளுக்கான நீரை வழங்குவதில் பெரும் தடைகள் மேலெழுந்துள்ளன. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற அம்பாறை மாவட்டத்தின் கல்லோயாத் திட்டம், பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரியா மற்றும் கிரித்தலே நீர்ப்பாசனத்திட்டம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தின் ஹுருலு வாவி மற்றும் இராஜாங்கனை போன்ற நீர்ப்பாசனத் திட்டங்களிலுள்ள கால்வாய்த் தொகுதிகளை மறுசீரமைப்புச் செய்வதற்காக 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியைப் பயன்படுத்தி மேற்குறிப்பிட்ட நீர்ப்பாசனத் திட்டங்களில் கீழ்க்காணும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• மின்னேரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் நீர்ப்பாசனத் தொகுதியை மற்றும் வடிகாலமைப்பு கால்வாய்த் தொகுதியை சீர்படுத்துவதற்காக - 300 மில்லியன் ரூபாய்கள்
• கிரித்தலே நீர்ப்பாசனத் திட்டத்தின் நீர்ப்பாசனத் தொகுதியை சீர்படுத்துவதற்காக - 200 மில்லியன் ரூபாய்கள்
• கல்லோயாத் திட்டத்தில் வெள்ளப்பெருக்குப் பாதிப்பு மற்றும் உடைந்து போன கால்வாய்த் தொகுதிகளை மீளமைப்பதற்காக - 900 மில்லியன் ரூபாய்கள்
• ஹுருலு வாவி நீர்ப்பாசனத் திட்டத்தின் நீர்ப்பாசனத் தொகுதி மற்றும் வடிகாலமைப்பு கால்வாய்த் தொகுதிகளை சீர்படுத்துவதற்காக - 300 மில்லியன் ரூபாய்கள்
• இராஜங்கன நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் மற்றும் மேல் நீர்ப்பாசனத் தொகுதிகளை சீர்படுத்துவதற்காக - 300 மில்லியன் ரூபாய்கள்

07. ஏற்றுமதி விவசாயப் பயிர் உற்பத்திகளை இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்காக ஏற்றுமதி விவசாய திணைக்களத்தால் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள்

மிளகு, கோப்பி, பாக்கு, கொக்கோ, கராம்பு, சாதிக்காய், ஏலக்காய், வனிலா, வெற்றிலை, தேசிப்புல், காவட்டம்புல், கொடுக்காய் புளி, மஞ்சள் மற்றும் இஞ்சி போன்ற 14 ஏற்றுமதிப் பயிர்களை மேம்படுத்துவதற்குத் தேவையான அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஏற்றுமதி விவசாய திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. தற்போது 82,000 ஹெக்ரயார் நிலப்பரப்பில் இப்பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றதுடன், ஒருமில்லியன் பங்காளர்கள் ஏற்றுமதி விவசாயப் பயிரிடல் மற்றும் தொழிற்றுறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தால் 2025 ஆண்டு தொடக்கம் பங்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் கீழ்க்காணும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், இவ்வேலைத்திட்டத்தின் கீழ் பயிர்ச்செய்கையாளர்களும், ஏனைய பங்காளர்களும் மேற்கொள்கின்ற முதலீடுகளில் 50மூ உயர்ந்தபட்ச பயன்களை வழங்குவதற்கும், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• ஏற்றுமதி விவசாயப் பயிர்களுக்கான புதிய பயிர்ச்செய்கை அளவை அதிகரிக்கும் வேலைத்திட்டம்
• ஏற்றுமதி விவசாயப் பயிர்ச்செய்கைகளின் பயனுறுதன்மையை அதிகரிக்கும் வேலைத்திட்டம்
• இயற்கை முறையிலான ஏற்றுமதிப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்
• இயற்கை முறையிலான செய்கைக்கான சான்றுப்படுத்தல் மற்றும் ஆய்வுகூடப் பரிசோதனைகளுக்கான பணிகள்
• சர்வதேச நியாய சந்தை முறைமை (Fair Trade) சான்றிதழ் வழங்குதல்
• சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இயற்கை முறையிலான பயிர்ச்செய்கைக்கு ஏற்புடைய ஏனைய சான்றிதழ்களை வழங்கல்
• அறுவடைக்குப் பின்னரான தொழிநுட்ப வேலைத்திட்டத்திற்கான வசதிகளை வழங்கல்
• நாற்று மேடைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம்
• ஏற்றுமதி விவசாயப் பயிர்ச்செய்கை மாதிரிகளை பேணுதல்
• சுற்றுலாத்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏற்றுமதிப் பயிர்ச்செய்கைக் கருத்திட்டங்கள்

08. அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதிசொகுசுப் பேரூந்துகளைப் பெறுகை செய்தல்
இலங்கை போக்குவரத்து சபையின் பொதுவான பேரூந்துத் தொகுதியில் 52% சதவீதமானவையும், மற்றும் அதிசொகுசு பேரூந்துத் தொகுதியில் 94% சதவீதமானவை பொருளாதாரத் தேய்மான ஆயுட்காலத்தைக் கடந்துள்ளதுடன், இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்துத் தொகுதிக்கு புதிய பேரூந்துகளை அறிமுகம் செய்ய வேண்டிய அவசர தேவை நிலவுகின்றது. அதிவேக நெடுஞ்சாலைப் பயணிகளின் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்குப் போதுமான பேரூந்துகள் இன்மையால் இலங்கை போக்குவரத்துச் சபையால் தற்போது தனியார் துறையினருக்குச் சொந்தமான 61 அதிசொகுசு பேரூந்துகளை இலாபப் பகிர்வு அடிப்படையில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதிவேக நெடுஞ்சாலைப் போக்குவரத்துக்கான 200 அதிசொகுசு பேரூந்துகளை தமது சொந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்வதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நிதி இயலுமை கொண்ட இலங்கை போக்குவரத்துச் சபை சாலைகள் மூலம் 29 அதிசொகுசுப் பேரூந்துகளை நேரடியாகக் கொள்வனவு செய்வதற்கும், இலங்கை போக்குவரத்துச் சபையின் நிதியைப் பயன்படுத்தி ஆரம்பத் தொகையொன்றைச் செலுத்தியும் எஞ்சிய தொகையை மாதாந்தத் தவணைக் கொடுப்பனவாக ஈட்டப்படுகின்ற இலாபத்தில் செலுத்துவதன் மூலம் ஏனைய பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. கொழும்பு துறைமுகத்தின் ஜய கொள்கலன் முனையம் - ஏ தளத்தை கொள்கலன்கள் களஞ்சியத் திடலை கற்கள் பரப்பி தாரிட்டுச் செப்பனிடுவதற்கான பெறுகை

நடுத்தர அளவிலான இரண்டு கொள்கலன் கப்பல்களுக்கு வசதியளிப்பதற்கு இயலுமை கிட்டும் வகையில் தற்போதுள்ள ஜய கொள்கலன் முனையம் - ஐஏ இன் இறங்குதுறை தளத்தின் நீளத்தை அதிகரிப்பதற்கும் கொள்கலன் களஞ்சியத் திடலின் அளவை அதிகரிப்பதற்கும் பின்புற கொள்கலன் களஞ்சியத் திடலை அபிவிருத்தி செய்வதற்கும் இலங்கை துறைமுக அதிகாரசபை திட்டமிட்டுள்ளது. ஜய கொள்கலன் முனையத்தை முழுமையாக இயக்குவதற்கு ஜய கொள்கலன் முனையம் - ஏ இன் எஞ்சியுள்ள அபிவிருத்திப் பணிகளைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. அதற்கமைய, மண் நிரப்பப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள கொள்கலன் களஞ்சியத் திடலை கற்கள் பரப்பி தாரிட்டுச் செப்பனிடுவதற்கும், தற்போதுள்ள களஞ்சியத் திடலுடன் இணைப்புச் செய்வதற்கான பெறுகைக்கு தேசிய போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளது. அதற்காக 09 விலைமுறிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கிணங்கள், விலைமனுக்கள் மதிப்பீட்டுக் குழு மற்றும் உயர்மட்ட பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைவாக, குறித்த பெறுகையை ஆஃள ஆயபய நுபெiநெநசiபெ டுவன இற்கு வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. எச்ஐவி/எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவுக்கு எதிராகச் செயலாற்றுவதற்கான உலகளாவிய நிதியத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள நன்கொடை நிதியத்தின் கீழ் எச்ஐவி/எயிட்ஸ், காசநோய்களுக்கான முகாமைத்துவம், தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

எச்ஐவி/எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா போன்ற மூன்று நோய்களுக்கான முகாமைத்துவம், தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான சுகாதாரம் அமைச்சின் கீழ் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் எச்ஐவிஃஎயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவுக்கு எதிராகச் செயலாற்றுவதற்கான உலகளாவிய நிதியத்தின் (புகுயுவுஆ) கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த கருத்திட்டத்தின் மூலம் காசநோய் மற்றும் எச்ஐவிஃஎயிட்ஸ் போன்ற இரண்டு கூறுகள் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. காசநோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மூலோபாயத் திட்டம் மற்றும் இலங்கையில் எச்ஐவிஃஎயிட்ஸ் தொற்றை முடிவுறுத்துவதற்கான 2023 – 2027 தேசிய மூலோபாயத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் மற்றும் நோக்கங்களை அடைவதற்காக 2025-2027 ஆண்டுக்கான நன்கொடை நிதியச் சுற்றை நடைமுறைப்படுத்துவது பொருத்தமெனக் கண்டறியப்பட்டுள்ளது. 2025-2027 காலப்பகுதியில் காசநோய் கூறுக்கான 2.97 அமெரிக்க டொலர் நிதியும் மற்றும் எச்ஐவிஃஎயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்திற்கு 6.38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு எச்ஐவி/எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவுக்கு எதிராகச் செயலாற்றுவதற்கான உலகளாவிய நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த நன்கொடை நிதியத்தைப் பயன்படுத்தி குறித்த இரண்டு வேலைத்திட்டங்களையும் வௌ;வேறாக நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. நுவரெலியா அஞ்சல் அலுவலகக் கட்டிடத்திற்கான உத்தேச அபிவிருத்திக் கருத்திட்டம்

நுவரெலியா அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு 2024.04.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒப்படைப்பதற்கு எதிராக தபால் ஊழியர்கள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். குறித்த கட்டிடத்தில் அஞ்சல் திணைக்களத்தின் செயற்பாடுகளை முன்னரைப் போன்று மேற்கொண்டு செல்வதற்கும் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்குப் பயன்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் நிர்மாணிப்பதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பின்னர் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நுவரெலிய அஞ்;சல் அலுவலகக் கட்டிடம் மற்றும் காணியை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள அமைச்சரவைத் தீர்மானத்தை இரத்துச் செய்வதற்கும் உள்நாட்டுஃவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையிலும், புதிய வருமான ஈட்டல்களுக்கு இயலுமை கிட்டும் வகையில் கட்டிடம் மற்றும் காணியை நவீனமயப்படுத்துவதற்கும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. நாவலப்பிட்டி, தம்புள்ள மற்றும் குளியாப்பிட்டி போன்ற மாவட்ட மருத்துவமனைகளுக்கான ஊவு ஸ்கான் 03 இயந்திரங்களுக்கான பெறுகை

நாவலப்பிட்டி, தம்புள்ள மற்றும் குளியாப்பிட்டி போன்ற மாவட்ட மருத்துவமனைகளுக்கான ஊவு ஸ்கான் 03 (64 Slices) இயந்திரங்களுக்கான வழங்கல், விநியோகம், நிறுவுதல், இயக்குதல் மற்றும் பராமரிப்புக்கான தேசிய போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன. அதற்காக 04 விலைமுறிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கிணங்க, உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழு மற்றும் பெறுகை மேன்முறையீட்டு சபையின் விதந்துரைக்கமைவாக நாவலப்பிட்டி, தம்புள்ள மற்றும் குளியாப்பிட்டி போன்ற மாவட்ட மருத்துவமனைகளுக்கான CT ஸ்கான் 03 (64 Slices) இயந்திரங்களை விநியோகிப்பதற்கான பெறுகையை M/s Hayleys Lifesciences Pvt Ltd இற்கு வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. முன் நிரப்பப்பட்ட எனோக்சபாரின் சோடியம் தடுப்பூசி 6,000 ஊசிமருந்து10, 0.6 மி.லீ சிறின்ஜ் 500,000 வழங்கலுக்கான பெறுகை.

இதய நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் முன்னரே நிரப்பப்பட்டுள்ள எனோக்சபாரின் சோடியம் தடுப்பூசி 6,000 ஊசிமருந்து10, 0.6 மி.லீ சிறின்ஜ் 500,000 வழங்கலுக்கான பெறுகைக்கு சர்வதேச போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது. குறித்த விலைமனு கோரலுக்கு 4 விலைமனுக்கள் கிடைத்துள்ளன. தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் உயர் மட்ட நிலையான பெறுகைக் குழுவின் விதந்துரையின் அடிப்படையில், குறிப்பிடத்தக்களவு பதிலளிப்புக்களுடன் கூடிய ஆகக்குறைந்த விலைமனுவான இந்தியாவின் நுஅஉரசந Phயசஅயஉநரவiஉயடள டுவன கம்பனிக்கு குறித்த பெறுகையை வழங்குவதற்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

14. அரச பெறுகைக்கான சட்டமூலத்தைத் தயாரித்தல்.

அரசியலமைப்பில் உரித்தளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் தேசிய பெறுகை ஆணைக்குழுவினால் அரச பெறுகைகளுக்கான சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்காக பன்னாட்டு ஆலோசகர் மற்றும் இரண்டு உள்நாட்டு ஆலோசகர்களின் சேவை பெறப்பட்டுள்ளது. குறித்த ஆலோசகர்களால் தயாரிக்கப்பட்ட அடிப்படை சட்டமூலமானது, தேசிய பெறுகை ஆணைக்குழுவால் வெளிநாட்டு முகவரகங்கள், அமைச்சுக்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டு மேலும் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மேற்குறித்த சட்டமூலத்தை அடிப்படையாகக் கொண்டு அரச பெறுகைக்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்பபித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

15. நச்சுக்கள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடத கட்டளைச் சட்டம் மற்றும் 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தை திருத்தம் செய்தல் (சமுத்திரத்தில் அபாயகரமான ஒளடத கடத்தலை தடை செய்தல்)

நச்சுக்கள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடத கட்டளைச் சட்டம் மற்றும் 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக (சமுத்திரத்தில் அபாயகரமான ஒளடத கடத்தலை தடை செய்தல்) சமர்ப்பிக்கப்பட்ட யோசனை 2025-02-09 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலில் தொடர்புடைய அனைத்து தரப்பினரதும் கருத்துக்களைப் பெற்று, ஆரம்ப வரைபுஃகருத்தாக்கப் பத்திரத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தொடர்புடைய தரப்பினரின் கருத்துக்களைப் பெற்று, நச்சுக்கள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடத கட்டளைச் சட்டம் மற்றும் 1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதித்துறைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்ட மூலத்தைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் சமர்பபித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

16. சிறுவர்களை விற்பனை செய்தல் தொடர்பான திட்டமிடப்பட்ட குற்றங்களை வெளிப்படுத்துதல், இனங்காணுதல், புலனாய்வு செய்தல் மற்றும் வழக்குத் தாக்கல் செய்தல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரமுள்ளவர்களுக்கான நியம நடவடிக்கைமுறை ஒழுங்குவிதிகள்.

சுரண்டலுக்காக சிறுவர்களை விற்பனை செய்தல் மனித உரிமை மீறலாக அமைவதுடன், சர்வதேச திட்டமிடப்பட்ட குற்றமாகவும் கருதப்படுகின்றது. அதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான சமவாயம் மற்றும் பிற சர்வதேச சமவாயங்களின் வரையறைகளில் அடங்கும் கடப்பாடுகளுக்கமைய இலங்கை தனது தேசிய பதில்வினையாற்றும் சட்ட ரீதியான நிறுவனம் மற்றும் செயல் ஒழுங்குவிதிப் பொறிமுறை ஊடாக பலப்படுத்துவதற்கான கடப்பாடு உண்டு. பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சினால் மகளிர் மற்றும் சிறுவர் பணியகம், இலங்கை பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பல்வேறு அலகுகள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினருடன் இணைந்து 'சிறுவர்களை விற்பனை செய்தல் தொடர்பான திட்டமிடப்பட்ட குற்றங்களை வெளிப்படுத்துதல், இனங்காணுதல், புலனாய்வு செய்தல் மற்றும் வழக்குத் தாக்கல் செய்தல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரமுள்ளவர்களுக்கான நியம நடவடிக்கைமுறை ஒழுங்குவிதிகள்' எனும் விரிவான நியம நடவடிக்கைமுறை ஒழுங்குவிதி தயாரிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த நியம நடவடிக்கை ஒழுங்குவிதிக்கு சட்ட மா அதிபரின் ஒத்திசைவு கிடைத்துள்ளது. அதற்கமைய, சிறுவர்களை விற்பனை செய்தல் தொடர்பான திட்டமிடப்பட்ட குற்றங்களை வெளிப்படுத்துதல், இனங்காணுதல், புலனாய்வு செய்தல் மற்றும் வழக்குத் தாக்கல் செய்தல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரமுள்ளவர்களுக்கான நியம நடவடிக்கை ஒழுங்குவிதி தொடர்புடைய தரப்பினர் முறைப்படி அமுல்படுத்தக்கூடிய வகையில் மேற்குறித்த நியம நடவடிக்கை ஒழுங்குவிதியை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

17. இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறையின் நிர்வாக கட்டமைப்பை மேலும் பலப்படுத்ததல்.

2005 ஆம் ஆண்டின் 38 இலக்க சுற்றுலாத் துறைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டத்தை அறிமுகம் செய்வதற்காக 2025-01-20 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவையின் கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட அறிஞர்கள் குழு தயாரித்துள்ள எண்ணக்கரு பத்திரத்துக்கு அமைய சட்ட வரைபை தயாரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்பபித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

18. மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள சூழ்நிலை

மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தற்போது மோசமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக தொடர்ந்துவரும் காலங்களில் இலங்கை எதிர்கொள்வதற்கு நேரிட்டுள்ள சவால்கள் தொடர்பாக முற்கூட்டிய தயார்நிலை இருக்க வேண்டிய தேவை பற்றி அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. அதற்கமைய, மத்தியகிழக்கு போர்ச்சூழல் தொடர்பாக ஆராய்ந்து, தாக்கங்கள் ஏற்படக்கூடிய துறைகள், தாக்கத்தின் அளவு மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய 












துரித நடவடிக்கைகள் பற்றிய மீளாய்வு செய்து, அமைச்சரவைக்கு சந்தர்ப்பத்திற்கேற்ப பொருத்தமான விதந்துரைகளை வழங்குவதற்காக கீழ்க்காணும் கட்டமைப்புடன் கூடிய அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கும், குறித்த உபகுழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஏற்புடைய அமைச்சுக்களின் செயலாளர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
• கௌரவ விஜித ஹேரத்
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
• கௌரவ சமந்த விதயாரத்ன
பெருந்தோட்டத்துறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்
• கௌரவ வசந்த சமரசிங்க
வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
• கௌரவ (பொறியியலாளர்) குமார ஜயகொடி
வலுசக்தி அமைச்சர்

2025.06.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 25, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.