Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

எனது கணவர் புலி ஆதரவாளர் எனில் நிரூபித்து காட்டுங்கள்!

“எனது கணவர் தமிழர் என்ற காரணத்தால் புலி முத்திரை குத்தக்கூடாது. அவருக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதென்றால் அதனை நிரூபித்துக்காட்டட்டும்.” –

இவ்வாறு அறகலயவின்போது முன்கள போராளிகளுள் ஒருவராக செயற்பட்ட, பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமித்த நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, உங்கள் கணவர் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டு உள்ளதே என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தமிதா மேலும் கூறியவை வருமாறு,

“எனது கணவர் இலங்கையில் இருக்கவில்லை. இங்கிலாந்தில் கல்வி பயின்றார், டுபாயில் வசிக்கின்றார். நான் அறகலயவில் ஈடுபட்டபோது டயஸ்போரா முத்திரை குத்தப்பட்டது. எனது கணவர் போராட்டத்தைக்கூட விரும்பவில்லை.

தமிழர்கள் அனைவரும் புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் எனக் கூறப்படுமானால், எனது கணவருக்கும் தொடர்பு உள்ளது என்பதை ஏற்கலாம். ஆனால் தமிழர் என்ற காரணத்துக்காக புலிகள் என முத்திரை குத்துவது ஏற்புடையது அல்ல. அவருக்கு புலிகளுடன் தொடர்பிருந்தால் நிரூபித்துக்காட்டட்டும்.” – என்றார்.

எனது கணவர் புலி ஆதரவாளர் எனில் நிரூபித்து காட்டுங்கள்! Reviewed by www.lankanvoice.lk on அக்டோபர் 20, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.