Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்துமாறு உத்தரவு!

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 1-ம் திகதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 200 ஏவுகணைகளை வீசியது. இதற்கு பதிலடியாக கடந்த 26-ம் திகதி இஸ்ரேலின் 100 போர் விமானங்கள் ஈரானின் 20 ராணுவ தளங்கள் மீது குண்டுகளை வீசின.

அன்றைய தினம் ஈரானின் ஆயுத கிடங்குகள், ஆயுத உற்பத்தி ஆலைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் நாட்டின் ஜனாதிபதியாக மசூத் பெசேஷ்கியன் பதவி வகிக்கிறார். எனினும் அந்த நாட்டு மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, பிரதமரைவிட உயர்ந்தவராக கருதப்படுகிறார். வெளியுறவு கொள்கை தொடர்பான முக்கிய முடிவுகளை அவரே எடுக்கிறார்.

இந்த சூழலில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் ராணுவத்துக்கு கமேனி உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5-ம் திகதி நடைபெறுகிறது. அதற்கு முன்பாக ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மீது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.


இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்துமாறு உத்தரவு! Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 02, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.