Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஆட்சி கவிழும் என பகல் கனவு காணும் ரணில்!

 

இந்த ஆட்சி மூன்று மாதங்களுக்குள் கவிழும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகல் கனவு கண்டுகொண்டிருக்கின்றார்.” என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டிய வரப்பிரதாசங்கள் , பாதுகாப்பு எல்லாம் வழங்கப்பட்டுள்ளன. அளவுக்கு அதிகமாக எதையும் வழங்கவேண்டியதில்லை. 180 இராணுவத்தினர், படையினர் எல்லாம் எதற்கு? தேவையற்ற விடயங்களை வழங்க வேண்டியதில்லை.

இந்த அரசாங்கத்தால் பயணிக்க முடியாது என ரணில் விக்கிரமசிங்க பகல் கனவு காண்கின்றார். இதற்கு முன்னரும் அவர் கனவு கண்டார். டொலர் 400 ரூபாவரை அதிகரிக்கும் என்றெல்லாம்கூட கூறினார். இன்று டொலர் பெறுமதி குறைவடைந்துள்ளது. கனவு காணும் உரிமை அவருக்கு உள்ளது. நன்றாக கனவு காணட்டும்.

எதிர்க்கட்சி தலைவரும் நகைச்சுவைத்தனமான கருத்துகளை கூறிவருகின்றார். அவரின் கருத்துகளை மக்கள் ஏற்கமாட்டார்கள்.” – என்றார்.

ஆட்சி கவிழும் என பகல் கனவு காணும் ரணில்! Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 02, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.