Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை பிர்தௌஸ் நளீமி நேரில் சென்று பார்வையிட்டார்.


வெள்ள அனர்த்தத்தினால்  
பாதிக்கப்பட்ட காத்தான்குடி வாவிக்கரை பிரதேசத்தை தேசிய மக்கள் சக்தியின் காத்தான்குடி அமைப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி நேரில் சென்று பார்வையிட்டார். 


இதன்போது வாவி பெருக்கெடுத்ததால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான அரச உதவிகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவை அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார். 


மேலும் பாதிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக சுத்தம் செய்வதற்கான உதவிகளை வழங்குமாறு பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளை பிரதேச செயலாளர் மற்றும் நகர சபை செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றார். அத்துடன் பிரதேசத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் சகலரினதும் ஒத்துழைப்புடன்  அவசரமாக சுத்திகரிப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார்.













வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை பிர்தௌஸ் நளீமி நேரில் சென்று பார்வையிட்டார். Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 29, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.