டிசம்பர் மாதம் 1ஆம் திகதி உலக எய்ட்ஸ் தினம் தேசிய நிகழ்வில் பிரதமர் ஹரிணி கலந்துகொண்டார்.
36வது எயிட்ஸ் தின, தேசிய நிகழ்வு இன்று (01) கொழும்பு காலி முகத்திடலில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி உலக எய்ட்ஸ் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
"உரிமைகளைப் பாதுகாப்பும் - எய்ட்ஸை ஒழிப்போம்" என்பது இந்த ஆண்டின் தொணிப்பொருளாகும்.
இந்த நிகழ்வை முன்னிட்டு நடைப்பயணம், எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நடைப்பயணத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் வாயு பலூன்களை பரக்க விடுதல் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததன.
டிசம்பர் மாதம் 1ஆம் திகதி உலக எய்ட்ஸ் தினம் தேசிய நிகழ்வில் பிரதமர் ஹரிணி கலந்துகொண்டார்.
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 01, 2024
Rating:

கருத்துகள் இல்லை: