Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

155 வருடங்கள் பழமையான மட்டக்களப்பில் சேதமடைந்துள்ள மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தை மாவட்ட அரசாங்க அதிபர் பார்வையிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சேதமடைந்துள்ள மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தை மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் (30) பார்வையிட்டார்.

நாட்டின் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் சுமார் 155 வருடங்கள் பழமை வாய்ந்த கட்டடமான மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களம் சேதமடைந்துள்ளது. 

இது தொடர்பாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் கவனத்திற்கு கொண்டு சென்றார் .

சேதமடைந்த மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்பாங செய்யப்பட்ட முறைப்பாட்டுடன் மட்டக்களப்பு மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்திற்கான புதிய அலுவலக கட்டிடம் ஒன்றிணையும் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

குறித்த கட்டடத் தொகுதியைப் பார்வையிட்டதுடன் மாவட்ட வளிமண்டல திணைக்களத்திற்கான புதிய அலுவலக கட்டிடம் ஒன்றினை வழங்குவதற்கு ஆவண செய்வதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இக்களவிஜயத்தின் போது வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட நிலையப் பொறுப்பதிகாரி எம். எ எம் சாதீக், ஓய்வு நிலை முன்னாள் சிரேஷ்ட வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி கணபதிப்பிள்ளை சூரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பாதிப்பு தொடர்பான விடயங்களும் தெளிவுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

155 வருடங்கள் பழமையான மட்டக்களப்பில் சேதமடைந்துள்ள மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தை மாவட்ட அரசாங்க அதிபர் பார்வையிட்டார். Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 01, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.