கடும் மழையினால் சேதமடைந்த மனம்பிட்டி - அரலகங்வில தற்காலிக இரும்பு பாலத்தின் நிர்மாணப் பணிகள் இரண்டு நாட்களில் நிறைவு
கடும் மழையினால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களைச் சீரமைக்க அமைச்சர் வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் இரவு பகலாக இடைவிடாது உழைத்து சேதமடைந்த, மனம்பிட்டி - அரலகங்வில (B-502) வீதியில் 19/1 பாலத்திற்குப் பதிலாக தற்காலிக இரும்புப் பாலத்தை விரைவாக நிர்மாணித்தனர்.
அதன்படி (30) காலை முதல் அப் பாலம் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.
பொதுவாக 15 நாட்கள் வரை எடுக்கும் இப்பணி, பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் இரவு பகலாக மேற்கொண்ட தொடர் அர்ப்பணிப்பால் இரண்டு நாட்களில் முடிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
கடும் மழையினால் சேதமடைந்த மனம்பிட்டி - அரலகங்வில தற்காலிக இரும்பு பாலத்தின் நிர்மாணப் பணிகள் இரண்டு நாட்களில் நிறைவு
Reviewed by www.lankanvoice.lk
on
டிசம்பர் 01, 2024
Rating:

கருத்துகள் இல்லை: