Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தின் குறைபாடுகள் விரைவில் தீர்க்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக பல்வேறு தேவைகளுடன் காணப்படும் மட்டக்களப்பு, வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என 
பாராளுமன்ற உறுப்பினர்,கலாநிதி MLAM.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.


இன்று (12) காலை வாழைச்சேனை மீன்பிடி துறைமுக முகாமையாளர் ஜீ.ஆர். விஜித்கரன் தலைமையில் 
மேற்படி சந்திப்பு இடம் பெற்றது.

தமது துறைமுக தேவை குறித்து மீனவர்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எடுத்துரைத்ததையடுத்து அது தொடர்பான அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதற்கான தீர்வு வழங்கப்படும் என இதன் போது மீனவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.


இக்கூட்டத்தில் வாழைச்சேனை துறைமுகத்துக்குற்பட்ட மீன்பிடி அமைப்புக்கள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களின் தேவை குறித்து கருத்துக்களை  முன்வைத்தனர்.


இதன் போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.


வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தின் குறைபாடுகள் விரைவில் தீர்க்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 12, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.