Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

நீங்கள்‌ பொ.த சா.தரம்‌ கற்று சித்தியடையாதவரா.... மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கற்கை நெறிகள் ஆரம்பம்


 
மட்டக்களப்பு தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ 2025ம்‌ ஆண்டுக்கான 30க்கு மேற்பட்ட NVQ மட்டம்‌ 3,4,5,6 இலான புதிய கற்கை நெறிகள்‌ ஆரம்பிப்பதற்கான விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளன.

இக்கற்கை நெறிகளுக்கு க.பொ.த சாதாரணதரம்‌ கற்று சித்தியடையாத மாணவர்களும்‌ சித்தியடைந்த மாணவர்களும்‌, க.பொ.த உயர்தரம்‌ சித்தியடைந்த மாணவர்களும்‌, க.பொ.த உயர்தரம்‌ கற்ற மாணவர்களும்‌ விண்ணப்பிக்கலாம்‌.

* இக்கற்கை நெறியை பயிலும்‌ மாணவர்களுக்கு மாதாந்தம்‌ 4000/- ரூபா நிபுணதா சிசு சலிய புலமைப்பரிசில்‌ உதவித்தொகை வழங்கப்படும்‌.

* மானிய அடிப்படையிலான போக்குவரத்து சீசன்‌ ரிக்கட்‌ வசதி செய்து       தரப்படும்‌.

* சுயதொழில்‌ தொடங்குவதற்கு கடன்வசதி வங்கி மூலமாக செய்து தரப்படும்‌.

* உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வசதிகள்‌ செய்து தரப்படும்‌.

விண்ணப்ப படிவங்கள்‌ மற்றும்‌ கற்கை நெறி தொடர்பான விடயங்களை தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ பெற்றுக்கொள்ளலாம்‌.

https://ism.dtet.gov.lk/OnlineDTET/public/Application   இல்‌ இணையத்தளத்தின்‌ ஊடாகவும்‌ மாணவர்கள்‌ விண்ணப்பிக்க முடியும்‌.

விண்ணப்ப முடிவுத்திகதி 27.12.2024 (மேலதிக தகவல்களுக்கு 22.11.2024ம்‌ திகதி அரச வர்த்தமானியை பார்வையிடவும்‌),


நீங்கள்‌ பொ.த சா.தரம்‌ கற்று சித்தியடையாதவரா.... மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கற்கை நெறிகள் ஆரம்பம் Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 08, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.