7 ஆயிரம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்
அமெரிக்காவில் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் சட்டவிரோதமாக தங்கி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க குடியேற்ற கல்வி மையத்தை சேர்ந்த ஜெசிகா எம்.வேகன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயில எப் 1 விசா வழங்கப்படுகிறது.
இதேபோல கல்வி சுற்றுலா வரும் வெளிநாட்டு மாணவ, மாணவியருக்கு எம் 1 விசா வழங்கப்படுகிறது.
இந்தியா, சீனா, பிரேசில், கொலம்பியா நாடுகளில் இருந்து எப்1, எம்1 விசா பெற்று அமெரிக்கா வரும் மாணவர்கள் விசா காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கி உள்ளனர்.
இதில் மிக அதிகபட்சமாக இந்தியாவை சேர்ந்த சுமார் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜெசிகா எம்.வேகன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: