Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

7 ஆயிரம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்

அமெரிக்​கா​வில் 7 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்திய மாணவர்கள் சட்ட​விரோதமாக தங்கி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க குடியேற்ற கல்வி மையத்தை சேர்ந்த ஜெசிகா எம்.வேகன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க பல்கலைக்​கழகங்​கள், கல்வி நிறு​வனங்​களில் வெளி​நாட்டு மாணவர்கள் கல்வி பயில எப் 1 விசா வழங்​கப்​படு​கிறது.

இதேபோல கல்வி சுற்றுலா வரும் வெளி​நாட்டு மாணவ, மாணவியருக்கு எம் 1 விசா வழங்​கப்​படு​கிறது.

இந்தியா, சீனா, பிரேசில், கொலம்​பியா நாடு​களில் இருந்து எப்1, எம்1 விசா பெற்று அமெரிக்கா வரும் மாணவர்கள் விசா காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து சட்ட​விரோதமாக தங்கி உள்ளனர்.

இதில் மிக அதிகபட்​சமாக இந்தியாவை சேர்ந்த சுமார் 7 ஆயிரத்துக்கு மேற்​பட்ட மாணவ, மாணவியர் அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக தங்கி​யிருக்​கின்​றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்​கப்பட வேண்​டும் என ஜெசிகா எம்.வேகன் தெரிவித்துள்ளார்.

7 ஆயிரம் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர் Reviewed by www.lankanvoice.lk on பிப்ரவரி 01, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.