பறிபோகிறது 500 முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியம்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால் 500 வரையான முன்னாள் எம்.பிக்கள் ஓய்வூதியக் கொடுப்பனவை இழப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் எம்.பிக்களின் ஒன்றியம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது என்று சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
‘ஓய்வூதியக் கொடுப்பனவில் வாழும் முன்னாள் எம்.பிக்கள் இந்த முடிவால் பாதிக்கப்படுவார்கள். சிலர் மருத்துவ செலவுகளைக்கூட கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.” – என்று மேற்படி ஒன்றியத்தின் செயலாளர் பிரேமசிறி தெரிவித்தார்.
எனவே, ஓய்வூதியக் கொடுப்பனவை அரசாங்கம் இரத்து செய்யக்கூடாது எனவும், அது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பறிபோகிறது 500 முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியம்!
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 10, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 10, 2025
Rating:

கருத்துகள் இல்லை: