காத்தான்குடி அந்-நாசர் மகா வித்தியாலய மாணவர்கள் களிகம்பு போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை!
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட இஸ்லாமிய
கலாச்சார போட்டிகள் கொழும்பு ஸாகிறா கல்லூரியில் நடைபெற்றது.
இன்றைய போட்டியில் மட்டக்களப்பு மத்தி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி அந்- நாசர் மகா வித்தியாலய மாணவர்கள் களி கம்பு போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.
இது பாடசாலைக்கும், வலயத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்.
பாடசாலைக்கும் பெருமை ஈட்டித் தந்துள்ளார்கள்.
இவர்களை பயிற்றுவித்த சிறுவர் அபிவிருத்தி நிலைய முகாமையாளர் ஜனாப்.S.அலாவுதீன்,
பாடசாலை ஆசிரியரான திருமதி.N.சாஜஹான் அவர்களுக்கும் அம்மாணவர்களை பாடசாலை சார்பாக அழைத்துச் சென்ற திரு.AMM.தாஸிம் அவர்களையும் கொழும்பு சென்று வர போக்குவரத்து வசதி செய்து தந்த சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் உபைத் ஹாஜியார் அவர்களுக்கும் உணவு மற்றும் இதர செலவுகளுக்கு உதவியளித்த அந்-நாஸர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான
M. ரவூப் பொறியலாளர் அவர்களுக்கும் அதிபர் ஆசிரியர் மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திக் குழு சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
(பாடசாலை சமூகம்)
காத்தான்குடி அந்-நாசர் மகா வித்தியாலய மாணவர்கள் களிகம்பு போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை!
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 02, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 02, 2025
Rating:


கருத்துகள் இல்லை: