Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடி அல்-ஹிறா சென் ஜோன்ஸ் அம்பியுலான்ஸ் முதலுதவிப் படையினரின் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.


(செய்தியாளர்
எம்.எஸ்.எம்.சஜீ)

காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலயத்தின் சென் ஜோன்ஸ் அம்பியுலான்ஸ் முதலுதவிப் படையினரின் சின்னம் சூட்டுதலும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை பாடசாலை அதிபர் எம்.பி.எம். றபீக் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். ஜவாட் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.எம். ஹகீம் மற்றும் சென் ஜோன்ஸ் அம்பியுலான்ஸ் மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் ஏ.எல்.எச்.எம். இனாமுல்லா சிறப்பு அதிதிகளாக தேசிய கடட் கோர்ப்ஸ் 38.ஆம் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி மேஜர் கே.எம். தமீம் மற்றும் சென் ஜோன்ஸ் அம்பியுலான்ஸ் மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் என். எம். எம். பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதன் போது பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் உட்பட உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளரும் கலந்து கொண்டனர்.


சென் ஜோன்ஸ் அம்பியுலான்ஸ் முதலுதவிப் படைப்பிரிவு மாணவர்களின் பெற்றோர்கள் இந்நிகழ்வு வெற்றிகரமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.



காத்தான்குடி அல்-ஹிறா சென் ஜோன்ஸ் அம்பியுலான்ஸ் முதலுதவிப் படையினரின் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. Reviewed by www.lankanvoice.lk on நவம்பர் 06, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.