காத்தான்குடி மீடியா போரத்தினருடனான சிநேகபூர்வ கலந்துரையாடல்
அண்மையில் உன்னிச்சை, இருநூறுவில் பிரதேசத்திற்கு களவிஜயம் ஒன்றினை முன்னெடுத்திருந்த காத்தான்குடி மீடியா போர நிர்வாக சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் தினம் (06.11.2025) இரவு 08:30 மணிக்கு சம்மேளன கூட்ட மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
சம்மேளன உப தலைவர் ஜனாப்.MAM.ஸுஹைர் B.Com (APFASL) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலினை சம்மேளன பொதுச் செயலாளர் மௌலவி. SHM. றமீஸ்.ஹாபிழ்.ஜமாலிMA (Linguistics) அவர்கள் நெறிப்படுத்தினார்கள்.
வரவேற்புரையினை பொதுச் செயலாளர் ஆற்றியதுடன், இக் கலந்துரையாடல் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.
அதனையடுத்து, காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ்.MSM. நூர்தீன் JP அவர்கள் சக நிர்வாக சபை உறுப்பினர்களினை அறிமுகப்படுத்தியதுடன், காத்தான்குடி மீடியா போரம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கினார்கள்.
தொடர்ந்தும், கலந்துரையாடலின் நோக்கம் தொடர்பாக விளக்கியதுடன், கடந்த 2025.10.26 ஆம் திகதி உன்னிச்சை இருநூறுவில் பிரதேசத்திற்கு முன்னெடுத்த கள விஜயம் தொடர்பாகவும், அப் பிரதேசத்தின் பூர்வீகம், அப் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக மிக விரிவாக விளக்கினார்கள்.
குறித்த பிரதேசத்திற்கான கள விஜயம் தொடர்பான விபரங்கள் அனைத்தினையும் உள்ளடக்கிய மிக விரிவான அறிக்கை காத்தான்குடி மீடியா போரம் சார்பாக சம்மேளனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அவசரமாக முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாக மிக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
அப்பிரதேச மக்களின் அடையாளப்படுத்தப்பட்ட அடிப்படை பிரச்சனைகள் அவற்றினை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் நடைமுறைப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் மிக விரிவாக ஆராயப்பட்டது.
அப்பிரதேசத்தில் காணப்படும் ஜும்ஆப் பள்ளிவாயலில் ஜும்ஆவினை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம், நிறுவனங்களின் சம்மேளனம், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளை, காத்தான்குடி மீடியா போரம் மற்றும் உன்னிச்சை, இருநூறுவில் முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாயல் ஆகியோரினை உள்ளடக்கிய வகையில் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்து இது விடயமாக அதீத கவனம் செலுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
நன்றியுரையினை காத்தான்குடி மீடியா போரம் செயலாளர் ஜனாப்.MI. அப்துல் நஸார் JP அவர்கள் ஆற்றினார்கள்.
இக் கலந்துரையாடலில் சம்மேளன நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் காத்தான்குடி மீடியா போரம் நிர்வாக சபை உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
ஊடகப் பிரிவு,
பள்ளிவாயல்கள் முஸ்லிம், நிறுவனங்களின் சம்மேளனம்,
காத்தான்குடி.
2025.11.06
காத்தான்குடி மீடியா போரத்தினருடனான சிநேகபூர்வ கலந்துரையாடல்
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 07, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 07, 2025
Rating:










கருத்துகள் இல்லை: