• Home
  • About Us
  • Contact Us
lankanvoice Media Network

Top Ad unit 728 × 90

Lankanvoice
  • செய்திகள் [News]
  • _இலங்கை
  • _உலகம்
  • அரசியல் [Political News]
  • விளையாட்டு [Sports New]
  • கட்டுரைகள் [Articles]
  • _கவிதைகள் [Poems]
  • கல்வி [Education]
  • _தொழில்நுட்பம்
  • நேர்காணல் [Interview]

இலங்கைச் செய்திகள்

Local News
Home politics சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களின் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியம்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களின் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியம்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

www.lankanvoice.lk டிசம்பர் 11, 2025 politics

அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டினை வழமை நிலைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டிற்கு சரியான தரவுகள் அவசியமென்றும், அந்தத் தரவுகளைச் சேகரிப்பதற்கு மக்கள் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியமென்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டினை வழமை நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் நேற்று 2025 டிசம்பர் 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனைக் கூறினார்.

இயற்கை அனர்த்தங்களைக் குறைத்து, இயற்கையுடன் இணைந்து நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்துப் பேராசிரியர் நிஹால் பெரேரா அவர்கள் விசேட உரையை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து, கருத்துத் தெரிவித்த பிரதமர்:

புதிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நோக்கிச் செல்லும்போது, நாம் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை என்னவென்றால், பல்வேறு தரப்பிலிருந்து பெறப்படும் தரவுகளை ஓரிடத்தில் தொகுப்பதற்குரிய பொறிமுறை இல்லாமையேயாகும்.

அடித்தளத்தில் இருக்கும் அரச உத்தியோகத்தர்களினதும் பொதுமக்களினதும் பங்கேற்புடனான தரவு சேகரிப்புப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். 

கிராமிய மட்டத்திலான தகவல்களைச் சரியாக அறிந்திருப்பது அவர்களே. அதனால், பிரதேச மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் சரியான தரவுகளைச் சேகரிப்பதற்கான பொறிமுறை ஒன்றினைத் தயாரித்துக்கொள்வது மிகவும் முக்கியமானதெனப் பிரதமர் தெரிவித்தார்.



இதன்போது கருத்துத் தெரிவித்த வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன:

மக்கள் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எந்தளவிற்குப் பிரயோசனமானவை என்பதை ஏற்பட்ட அனர்த்த நிலைமையின்போது நாம் நன்றாகப் புரிந்துகொண்டோம். வெள்ள நிலைமையின்போது கடுவெல பிரதேச மக்கள் பங்கேற்புடன் நாம் செயற்பட்ட விதம் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தது. அதன் போது எமக்கு கொட்டகச் சபை முறைமை மிகவும் பிரயோசனமாக இருந்தது. தரவு சேகரிப்புச் செயற்பாட்டிற்கும் சமூக சக்தி கொட்டகச் சபை போன்றதொரு பொறிமுறையைப் பயன்படுத்த முடியுமானால் மிகவும் பிரயோசனமாக அமையும்.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்கள்:

தரவுகள் தொடர்பான விடயத்தில் அரச நிறுவனங்களுக்கிடையில் முறையான தொடர்பின்மை பிரதான பிரச்சினையாகும். 

நிறுவனங்களுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமையும், தமது எல்லைக்குள் உள்ள கடமைகளைச் செய்வதற்கு மாத்திரம் அதிகாரிகள் செயற்படுவதும் இந்த நிலைமை ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது. 

அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் ஒன்றிணைத்த தரவு சேகரிப்புப் பொறிமுறை ஒன்றைத் தயாரித்துக்கொள்வது மிகவும் முக்கியமானதெனத் தெரிவித்தார்.

தரவுகளின் அடிப்படையில் தீர்மானங்களை எடுப்பதன் அவசியம் மற்றும் அது தொடர்பில் பிரதேச மட்ட அதிகாரிகளையும் மக்களையும் அறிவூட்ட வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின்போது வலியுறுத்தப்பட்டது.

பிரதமரின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு


சரியான தரவுகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களின் பங்கேற்புடனான முறையான பொறிமுறை அவசியம்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 11, 2025 Rating: 5

Tags :

politics
  • Tweet
  • Share
  • Share
  • Share
  • Share
www.lankanvoice.lk

About Lankanvoice Media

Number of Entries : 500+

Leading News Agency in Eastern Provience.

politics

கருத்துகள் இல்லை:

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate

76th Happy Independence Day

76th Happy Independence Day

Ads

Ads

Ads

Ads
Contact us

பிரபலமான இடுகைகள்

  • முக்கிய அறிவிப்பு, உன்னிச்சை குளத்தின் தற்போதைய நிலைமை (நவம்பர் 2025)
    முக்கிய அறிவிப்பு, உன்னிச்சை குளத்தின் தற்போதைய நிலைமை (நவம்பர் 2025) இன்று நான் நேரடியாக உன்னிச்சை அணைக்கட்டுப் பகுதிக்கு விஜயம் செய்து, அங...
  • காத்தான்குடியில் மூன்றாவது நாளாகவும் தொடரும் டெங்கு பரிசோதனை - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!
    (ஊடகவியலாளர்     B.M. பயாஸ்   ) கடந்த சில நாட்களாக பெய்து வந்த அடை மழை காரணமாக நீர்தேங்கி நிற்கும் பகுதிகளில் டெங்கு அபாயம் காணப்படுவதை அடுத...
  • அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அனைத்துத் தரப்பினரின் இணக்கமும் கிடைத்திருக்கின்றது. - பிரதமர் ஹரிணி
    உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய, அரச சேவைகள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் சேவை யாப்பு ஆகியவற்றுக்கு அமைய...
  • வெள்ள அனர்த்த சேத மதிப்பீடுகளும் நிவாரண திட்டங்களும்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி தலைமையில் காத்தான்குடியில் விசேட கூட்டம்..!
    அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தத்தினால், காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட வீடுகள், வியாபார நிலையங்...

Recent Posts

மாற்றியமைக்கப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சைத் திகதிகள் 2026 ஜனவரி மாதத்தில் தீர்மானிக்கப்படும்.

  மாற்றியமைக்கப்பட்ட க.பொ.த. உயர்தரப் பரீட்சைத் திகதிகள் 2026 ஜனவரி மாதத்தில் தீர்மானிக்கப்படும். * தடங்கலின்றிப் பரீட்சைக்குத் தயாராவதற்காக...

Interested

  • இக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.
    சிரேஷ்ட சட்டத்தரணி  MIM.அஸ்வர்  எமது நாட்டின்  இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய வி...
  • இரண்டு மாத மின்சார கட்டணங்களை எவ்வாறு கணக்கிடுவது என்பதை தெளிவுபடுத்திய சபை
    இரண்டு மாதம் மின்சார அலகுகளை ஒன்றாக இணைத்து கணக்கிடும்போதும் அலகின் வரம்புகள் காரணமாக மின்சார கட்டணங்களை அதிகரிக்கக்கூடும் என மக்கள் மத்திய...
  • ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதி சுற்றிவளைக்கப்பட்டு சோதனை
    (பழுலுல்லாஹ் பர்ஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஷிம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங...
  • பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமாக NFGG + SLMC தொடர் பேச்சு.... பொறியியலாளர்களான சிப்லி பாறூக், அப்துர் றஹ்மான் சந்திப்பு.
    நடைபெற  இருக்கின்ற பாராளுமன்றத்  தேர்தலில் முஸ்லிம்கள் எதிர் நோக்கி இருக்கின்ற பிரச்சினைகள், சவால்களை கவனமாக கையாளவும், கிடைக்கப் பெறுகின்ற ...
All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.