Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

கொழும்பு மாநகரசபையில் வென்றது மனசாட்சியா, அரசியல் டீலா?

கொழும்பு மாநகரசபையில் கூட்டு எதிரணி தமது பெரும்பான்மை பலத்தை இழக்கவில்லை. மக்களுக்காக கூட்டு எதிரணியாக தொடர்ந்து செயல்படுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் ரிசா சாருக் தெரிவித்தார்.

வரவு- செலவுத் திட்டம் முதல் தடவை தோற்கடிக்கப்பட்டபோது மனசாட்சி பற்றி கருத்து வெளியிட்ட மேயர், இன்று ஆளுங்கட்சிக்கு எவ்வாறு பெரும்பான்மை பலம் கிடைத்தது என்பது பற்றி தனது மனசாட்சியிடம் கேட்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“ கூட்டு எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர் ஒருவர் பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களித்தார். முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு செயல்பட்டார்.

ஏனைய இரு உறுப்பினர்கள் காணாமல்போய் இருந்தனர். அவர்களது தொலைபேசிகூட இயங்கவில்லை. எனவே, என்ன நடந்திருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.” – எனவும் அவர் கூறினார்.

கொழும்பு மாநகரசபையில் வென்றது மனசாட்சியா, அரசியல் டீலா? Reviewed by www.lankanvoice.lk on டிசம்பர் 31, 2025 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.