ட்ரம்பின் எச்சரிக்கை போர்க்குற்றம்: ஈரான் சுட்டிக்காட்டு!
ஈரானின் சிவில் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைகள் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை என்று ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் kazem gharibabadi குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய மிரட்டல்கள் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளையும் சர்வதேச சட்டங்களையும் மீறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு நாட்டின் மீது தேவையற்ற அச்சுறுத்தல்களை விடுப்பது உலகளாவிய பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு எதிரானது என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் உடனடியான மற்றும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சிவிலியன் இலக்குகளைத் தாக்குவது ஒரு போர்க்குற்றம் என்பதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னாள் வழக்கறிஞரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 06, 2026
Rating:

கருத்துகள் இல்லை: