Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

வினாத்தாள் கசியவிட்டால் 10 ஆண்டுகள் சிறை: இந்திய அமைச்சரவை ஒப்புதல்

தேர்வு வினாத்தாள் கசிந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 10 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது.

தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; அதன் பிறகுதான் பேச்சுவார்த்தையிலோ அல்லது விவாதத்திலோ பங்கேற்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்கான ‘பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளை தடுத்தல்) சட்டம் 2024-ல் கடுமையான திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி வரை அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசியவிட்டால் 10 ஆண்டுகள் சிறை: இந்திய அமைச்சரவை ஒப்புதல் Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 24, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.