புனருதயே புரவர "புத்துயிர்க்கும் புதுநகரம்” உள்ளூராட்சி வாரம் - 2026 அங்குரார்ப்பன நிகழ்வு
காலம் - 14.09.2026 (திங்கட் கிழமை)
நேரம் - காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 01.00 மணிவரை
இடம் - முகைதீன் மெத்தைப் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல், காத்தான்குடி.
உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை நிகழ்வில் பொதுமக்கள் பின்வரும் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
1.பொதுமக்கள் முறைப்பாடுகள், கோரிக்கைகள் கையேற்றலும் அது தொடர்பாக நகர முதல்வரால் நேரடியாக பார்வையிட்டு உடனடி தீர்வுகள் வழங்கப்படும்.
2. கட்டட விண்ணப்பங்கள் கையேற்றல்.
3. ஆதனவரி செலுத்துதல், ஆதனவரி பெயர் மாற்றம் செய்தல், வியாபார வரி மற்றும் ஏனைய சேவைகள்.
4. மின்விளக்கு கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு வழங்கல்.
5. வீதி சிதைவுகள் சீர்செய்தல், வீதி துப்பரவு, வடிகான் துப்பரவு.
6. பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் பொதுமக்கள் சேவைகள் முகாம்.
7. தாய்சேய் நலன் மருத்துவ முகாம்.
8. இலவச பல் வைத்திய முகாம்.
9. கால்நடை வைத்திய முகாம்.
10. நீர் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் சேவைகள் முகாம்.
11. ஆயுர்வேத வைத்திய முகாம்.
12. இலவச கண் பரிசோதனை முகாம்.
ஆகிய சேவை முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மேற்படி நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
ஏற்பாடு -
புனருதயே புரவர "புத்துயிர்க்கும் புதுநகரம்” உள்ளூராட்சி வாரம் - 2026 அங்குரார்ப்பன நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 13, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 13, 2026
Rating:




கருத்துகள் இல்லை: