முஸ்லிம் திணைக்களம் நடாத்திய முஹர்ரம் புதுவருட நிகழ்வு 2018
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இலங்கை அஹதியா மத்திய சம்மேளனம் மற்றும் கொழும்பு மாவட்ட அஹதியா பாடசாலை சம்மேளனம் ஆகியவற்றோடு இணைந்து நடாத்திய 1440 ஆவது முஹர்ரம் புதுவருட நிகழ்வு (19) புதன்கிழமை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தபால், தபால் சேவைகள் முஸ்லிம் சமய அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தலைமையில் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.ஆர்.எம். மலிக் (நளீமி), உதவிப் பணிப்பாளர் றியாஸா நௌபல் ஆகியோரின் வழிகாட்டலிலும் அஷ்ஷேக் எம்.எம்.எம். முப்தி (நளீமி)யின் ஒருங்கிணைப்பிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில், 1440ஆவது முஹர்ரம் புதுவருடத்தை சிறப்பிக்கும் முகமாக கொழும்பு மாவட்ட அஹதியா பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், அஹதியா பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அஹதியா மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அமைச்சல் ஹலீம், அமைச்சர் பௌசி, திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.ஆர்.எம். மலிக் (நளீமி), உதவிப் பணிப்பாளர் றியாஸா நௌபல், தபால் மா அதிபர் உட்பட உயர் அதிகாரிகள், உலமாக்கள், மாணவர் கள், பெற்றோர்கள், ஊடகவியலாளர் கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் திணைக்களம் நடாத்திய முஹர்ரம் புதுவருட நிகழ்வு 2018
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 20, 2018
Rating:

கருத்துகள் இல்லை: