தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லையா....?
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
இவ்வருடம் கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களில் 80 சதவீதமான மாணவர்களுக்கு தேசிய ஆள் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் இதுவரை கிடைத்த விண்ணப்பங்களுக்கு ஏற்ப விநியோகிக்கப்படாத அடையாள அட்டைகள் இம்மாத இறுதிக்குள் விநியோகிக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள சுமார் 3 இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேசிய ஆள் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
இதுவரை தேசிய ஆள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத சாதாரண தர பரீட்சாத்திகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் பரீட்சாத்திகளைக் கேட்டுள்ளது
தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லையா....?
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 20, 2018
Rating:

கருத்துகள் இல்லை: