Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

  

கொழும்பு சாஹிராவின் ஸ்தாபகர் தின நிகழ்வு நாளை கொழும்பபில்





கொழும்பு மருதானை சாஹிராக் கல்லூரியின் ஸ்தாபகர் தின நிகழ்வு நாளை (21) வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு கல்லூரியின் என்.டி.எச். அப்துல் கபூர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கல்லூரியின் அதிபர் றிஸ்வி மரிக்கார் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில்,  பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தருமான பேராசிரியர் ஏ.ஜி. ஹுஸைன் இஸ்மாயில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொள்கிறார்.

பாடசாலைகளில் நவீன கல்விக்கான சவால்கள்’ எனும் தலைப்பில் அவர் சிறப்புரையாற்றவுள்ளார்.

இந்நிகழ்வில்கல்லூரி அதிபர் றிஸ்வி மரிக்கார்கல்லூரியின் ஆளுனர் சபையின் தலைவர் பௌசுல் ஹமீத்செயலாளர் அலவி முஸ்தாக்அரசியல் பிரமுகர்கள்,  உலமாக்கள்ஆசிரியர்கள்கல்லூரி பழைய மற்றும் புதிய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொள்வர்.

ஸ்தாபகர் தினப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இதன்போது இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கொழும்பு சாஹிராவின் ஸ்தாபகர் தின நிகழ்வு நாளை கொழும்பபில் Reviewed by We Are Anonymous on செப்டம்பர் 20, 2018 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.